செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

எப்பத் தான் வருவீக... உள்ளம் ஏங்கிய கிராமக் குயில் குரல்வளை நெரித்துக் கொலை... மைக் செட்டுக்காரரின் பக்கா நாடகம்...

Feb 01, 2024 01:52:06 PM

மதுரையில், காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நாட்டுப்புற பாடகியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு மாரடைப்பில் அவர் இறந்ததாக நாடகமாடிய மைக் செட்டுக்காரர் போலீஸில் சிக்கியதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

எப்பத்தான் வருவீக என கிராமத்து மேடைகளில் கானம் இசைத்த இந்த கிராம குயிலின் கணீர் குரலை இனிமேல் கேட்க முடியாமல் செய்த மைக் செட்டுக்காரர் தான் இவர்.

"கிராமக் குயில்" என அழைக்கப்பட்டு வந்த மேடை பாடகியான மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த கவிதா கணவரை பிரிந்து தனது 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது அங்கே மைக் செட் அமைத்துக் கொடுத்து வந்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாகராஜனுடன் கவிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரும் மனைவியை பிரிந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்ததால் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

அவரவர் குழந்தைகளை தங்களின் பெற்றோர் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்ததோடு, தம்பதியர் பதினெட்டான்குடி கிராமத்தில் தனியாக வீடு எடுத்து தங்கினர். ஆனாலும், தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த திங்களன்று கோவில் விழாவில் பாடுவதற்காக மதிச்சியத்தில் தங்கியுள்ளார் கவிதா. அங்கு வந்து அவரது ஏ.டி.எம். அட்டையை வாங்கிச் சென்ற நாகராஜன் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிலிருந்து எடுத்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியை முடித்து விட்டு வீடு திரும்பிய கவிதா இதுகுறித்து நாகராஜனிடம் கேட்ட போது, திருப்பரங்குன்றத்தில் தான் வேறு வீடு பார்த்துள்ளதாகவும் அதற்காக பணம் எடுத்ததாகவும் கூறியுள்ளார் நாகராஜன். ஆனால், வேறு வீட்டிற்கு செல்ல தனக்கு விருப்பம் இல்லை எனவும் பணத்தை திரும்பத் தருமாறு கவிதா கேட்கவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவரது கழுத்தை பிடித்து நாகராஜன் நெரித்ததாகவும் கூறப்படுகிறது.

வலி தாங்காமல் கவிதா கூச்சலிட்டவாறே மயங்கி சரியவும், அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தனது மனைவிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளார் நாகராஜன். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கவிதாவை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.

அதிர்ச்சியடைந்தாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்த நாகராஜன், தன் மனைவி உயிரிழக்கவில்லை என கூறி ஊரார் முன்னிலையில் நாடகமாடி உள்ளார். ஆட்டோ ஒன்றை வரவழைத்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கவிதாவை கொண்டு சென்ற போதும் உயிரிழப்பை உறுதி செய்தனர் மருத்துவர்கள்.

உடற்கூராய்வின் போது கவிதாவின் கழுத்து எலும்புகள் உடைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தலைமறைவாகி விட்ட நாகராஜனை தேடி கண்டுபிடித்த போலீஸார் அவரிடமிருந்த 65 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம் அட்டையில் பணம் எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கவிதாவின் கழுத்தை நெரித்ததாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் நாகராஜ் வாக்குமூலம் அளித்ததால் அவரை கைது செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.

குடும்ப தகராறில் ஆத்திரத்தில் கணவன் செய்த செயலால் 4 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு சென்றிருப்பதாக தெரிவித்தனர் போலீஸார்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement