சேலம் கன்னங்குறிச்சி அருகே தனது தாயை கொலை செய்த சித்தப்பாவை பழிக்கு பழி வாங்கும் வகையில் கழுத்தை அறுத்துக் கொன்றதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், தமது மகள் காதல் திருமணம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி உடன் பிறந்த அண்ணனின் மனைவி சாந்தியை கொன்ற வழக்கில் கடந்த செப்டம்பரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஒரு மாதத்துக்கு முன் அவர் ஜாமீனில் வெளியே வந்ததை அடுத்து கருணாநிதியை சாந்தியின் மகன் விக்னேஸ்வரன் கொன்று பழி தீர்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.