செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரெட்டையாக காட்டுக்குள் போய் ஒற்றையாக பைக்கில் வீட்டிற்கு திரும்பிய காதல் கணவன்..! சிசிடிவியால் துப்பு துலங்கியது

Jan 27, 2024 08:22:04 AM

சாத்தான்குளம் அருகே காதல் மனைவியை பைக்கில் அழைத்துச்சென்று தேரிக்காட்டுக்குள் வைத்து கொலை செய்த கணவன் வீட்டிற்கு திரும்பி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

சாத்தான்குளம் அருகே உள்ள இடச்சிவிளை எம்.எல்.தேரிகாட்டு பகுதியில் துப்பட்டாவல் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சுடிதார் அணிந்த பெண்ணை பைக்கில் காட்டுக்குள் அழைத்துச்சென்ற இளைஞர் ஒருவர் சிறிது நேரம் கழித்து தனியாக அதிவேகத்தில் திரும்பிச்செல்வதை கண்டுபிடித்தனர்.

இருசக்கர வாகன பதிவெண்ணை வைத்து துப்பு துலக்கிய போலீசார், பைக்கில் தப்பியவர் கூவன்கிணறு பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் என்பதையும், அவர் சாதி மறுப்பு திருமணம் செய்த தனது காதல் மனைவி ஜான்சிராணி கீதாவை பைக்கில் அழைத்து வந்து தேரிக்காட்டுக்குள் கொலை செய்து விட்டு தப்பியதையும் கண்டுபிடித்தனர்.

விசாரணைக்காக போலீசார் அவரது வீடுதேடிச்சென்ற போது அந்தோணி ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு சாதியை சேர்ந்த இருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாகவும், இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 வருடமாக அந்தோணிராஜ் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் வேறு பெண்களுடன் பழகிக் கொண்டு ஊதாரியாக சுற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் தனது மனைவி வேறு நபர்களிடம் பேசுவதையும் சந்தேகக் கண்கொண்டு பார்த்த அந்தோணிராஜ் அவரை அடித்து உதைத்தாகவும் கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு இரு குழந்தைகளையும் மாமியார் வீட்டில் விட்டு விட்டு, மனைவி ஜான்சிராணியை மட்டும் பைக்கில் அழைத்துக் கொண்டு தாங்கள் காதலித்த போது தனிமையில் சந்திக்கும் இடமான தேரிக்காட்டு பகுதிக்கு அந்தோணிராஜ் அழைத்துச்சென்றதாக கூறப்படுகின்றது. அங்கு வைத்து துப்பாட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை புதரில் மறைத்து போட்டு விட்டு வீட்டிற்கு தப்பி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தனது மனைவியை கொலை செய்த விரக்தியில் இருந்த அந்தோணிராஜ் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். காதல் தம்பதிக்குள் நீடித்த பரஸ்பர சந்தேக தீ, அவர்களது ஏதுமாறியா 2 சின்னஞ்சிறு குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கிவிட்டது தான் சோகம்...

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement