செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

Jan 20, 2024 02:58:59 PM

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆலய தரிசன பயணத்தின் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று ஸ்வாமி தரிசனம் செய்தார்.

சென்னையிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து கொள்ளிடக்கரை வரை ஹெலிகாப்டரில் சென்றார். பின்னர் சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றார்.

காரில் சென்ற பிரதமருக்கு சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பொதுமக்கள் வரவேற்பளித்தனர். காரில் நின்றபடி வழிநெடுகிலும் காத்திருந்த மக்களை நோக்கி கையசைத்து வரவேற்பை பிரதமர் ஏற்றார்.

பின்னர், பட்டு வேட்டி, துண்டு போர்த்தியபடி ரங்கநாத சுவாமி கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

ரங்கநாத சுவாமி கோயிலில் கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் கோயில்களில் வழிபாடு செய்த பிரதமர், காயத்ரி மண்டபத்தில் நின்று ரங்கநாதரை தரிசனம் செய்தார்.

கோயில் பிரகாரத்தில் வலம் வந்த பிரதமர், யானை ஆண்டாளுக்கு பழங்களை வழங்கினார். பிரதமரை தும்பிக்கையால் ஆசி வழங்கிய யானை, மெளத் ஆர்கான் இசைக்கருவியை வாசித்ததை கண்டு ரசித்தார்.

பின்னர், உற்சவர் நம்பெருமாளை வழிபட்ட பிரதமருக்கு ஜடாரி வைத்து அர்ச்சகர்கள் ஆசி வழங்கினர்.

தரிசனத்தை முடித்தபின் கம்பர் மண்டபத்தில் அமர்ந்து கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்ட பிரதமர் அங்கு உள்ள ராமநாதஸ்வாமி கோவிலில் வழிபாடு செய்வதுடன், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 22 புனித தீர்த்தங்களை பெற்றுக்கொள்கிறார்.


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement