செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

உழவுக்கும் உணவுக்கும் உயிருக்கும் உறுதுணையாக நிற்கும் மாடுகள்... விவசாயிகள் மட்டுமின்றி அனைவருமே மாடுகளுக்கு நன்றி சொல்லும் நன்நாள்

Jan 16, 2024 07:51:23 AM

உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாக நின்ற மாடுகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக விவசாயிகள் இன்று மாட்டுப் பொங்கலை கொண்டாடுகின்றனர். 

உயிருக்கு அடிப்படையான உணவை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுவது மாடுகள்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உலகின் பிற பிரதேசங்களில் மாடுகளை உணவுக்காக வேட்டையாடி வந்தபோது, அவற்றைக் கொண்டு விவசாயம் செய்த சமூகமாக இந்திய சமூகம் இருந்துள்ளது.

ஏரில் பூட்டப்பட்ட காளைகள் மண்ணை பதமாக்கி பயிர் செய்ய உதவுகிறது என்றால், நம்மைப் பெற்ற தாய்க்கு அடுத்து தனது குருதியை பாலாக்கித் தருகின்றன பசுக்கள்.

இந்த நன்றியை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாட்டுப் பொங்கல் கொண்டாடும் கலாச்சாரம் உருவானது. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

மாட்டுப் பொங்கலன்று அந்தந்த வீடுகளில் அவர்கள் வளர்க்கும் காளைகளும் பசுக்களும்தான் ஹீரோ, ஹீரோயின்.

அவற்றின் கொம்புகளை சீவி, குளிப்பாட்டி, வர்ணம் பூசி, அலங்காரங்கள் செய்து, பொங்கலிட்டு படையல் வைப்பர்.

சிலர் மாடுகளுக்கு திருஷ்டி ஏற்படக் கூடாது என்பதற்காக காதோலை, கருகமணி ஆகியனவும் அணிவித்து அலங்கரிப்பர்.

கிராமங்களில் யாருடைய மாடு அன்றைய தினம் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது என்பதில் சக விவசாயிகளுக்கு இடையே போட்டியே இருக்கும்.

மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான, அழகான பந்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல், தமிழர்களின் வாழ்வியல் வழியில் முக்கிய பங்கை வகிக்கிறது.

 

 


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement