செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆளாளுக்கு ஏறி ஓட்ட இது என்ன ஆம்னி வேனா.. அரசு பேருந்துப்பு.. பார்த்து..!அப்ரசண்டி ஓட்டுனர்கள் அட்ராசிட்டி

Jan 10, 2024 06:44:17 AM

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பயணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக, தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்பட்ட நிலையில், சில அனுபவமில்லா ஓட்டுனர்களால்  பேருந்துகள்  நடுவழியில் நின்றன.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏராளமான தற்காலிக ஓட்டுனர்களை களத்தில் இறக்கினர்.

கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர் பேட்டைக்கு இது போன்ற தற்காலிக ஓட்டுனர் ஒருவர் அரசு பேருந்தை இயக்கி சென்ற நிலையில், அந்த பேருந்தில் கியர் சரிவர விழாமலும், வளைவில் பேருந்தை திருப்ப இயலாமலும் மெதுவாக நகர்ந்தபடியே ஓட்டிச்சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் பேருந்தை நடுவழியில் நிறுத்திய அந்த அப்ரசண்டி ஓட்டுனர், தான் டாடா ஏஸ் வாகனம் என்றால் எளிதாக ஓட்டி விடுவேன் என்றும் அரசு பேருந்து ஓட்டுவது கஷ்டமாக இருக்கு.. ஆள விடுங்க.. என்று கையெடுத்து கும்பிட்டு பேருந்தை அம்போவென விட்டுச்சென்றார்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தற்காலிக ஓட்டுனர் வளைவில் திருப்ப முயன்ற போது சாலையோரம் இருந்த பெட்டிக்கடையை பேருந்து பதம் பார்த்தது. அதிர்ஷடவசமாக கடை முன்பு யாரும் இல்லாததால் பொருட்கள் சேதம் அடைந்ததோடு கடை தப்பியது

இதற்கு எல்லாம் உச்சகட்டமாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்றை வெளியே கொண்டுவருவதற்குள், படாதபாடுபட்டார்.. ஜல்லிக்கட்டு திடலுக்கு வர மறுத்து அடம்பிடிக்கும் காளை போல பேருந்து முன்னே செல்லாமல் முரண்டு பிடித்தது.

இதனை கண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்கள் அப்ரசண்டி வண்டிய எடுறா.. என்று கோஷமிட்டனர்

நீண்ட நேரம் போராடியும் அந்த பேருந்து முன்னே செல்ல மறுத்ததால், மப்டியில் இருந்த ஓட்டுனர் ஒருவர் பேருந்தில் ஏறி, ஆள் ஆளுக்கு ஓட்ட இது என்ன வாடகை சைக்கிளா.. அரசு பேருந்து என்று கெத்தாக கியர் போட்டு சிட்டாக வெளியே எடுத்துச்சென்று கொடுத்தார்.

சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு பேருந்து பழுதானதாக கூறி நடுவழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவகையில், அரசு போக்குவரத்து கழகம் , பெரும்பாலான ஊர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளை இயக்கியது குறிப்பிடதக்கது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement