செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதை துண்டாக வெட்டிய.. கறிக்கடை லவ்வர்..! காதல் கசந்ததால் மனைவி திரிஷா மீது தாக்குதல்

Jan 08, 2024 07:50:16 PM

காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து வாழும் நிலையில், வேறு ஒரு இளைஞருடன் பைக்கில் சுற்றுவதை கண்டு ஆத்திரமடைந்த கணவர், பட்டபகலில் கறி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் அரங்கேறி உள்ளது

காதல் கணவனால் வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட வீதியில் தவித்த பெண்ணை போலீசார் மீட்ட காட்சிகள் தான் இவை..!

சென்னை திருவெற்றியூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜெயினப் என்கிற திரிஷா .

24 வயதான இவர் கடந்த மூன்று ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டையை சேர்ந்த கறிக்கடை ஊழியர் ரஹ்மத்துல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணத்துக்கு பின் காதல் கணவர் மதுவுக்கு அடிமையான நிலையில் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற திரிஷா குழந்தை பெற்ற பின்னரும் அங்கேயே வசிக்க தொடங்கினார்.

கணவனை சந்திப்பதை தவிர்த்த திரிஷா, கடந்த எட்டு மாதங்களாக புதுவண்ணார பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள இரும்பு குடோனில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை காலை 11:45 மணி அளவில் தனது மனைவி வேலை செய்யும் இரும்பு குடோனுக்கு சென்ற ரஹ்மத்துல்லாஹ் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மனைவி திரிஷாவை வெளியே அழைத்து வந்து, மறைத்து வைத்து எடுத்துச்சென்ற கறி வெட்டும் கத்தியால் சராமாரியாக வெட்டியுள்ளார்.

தலை மற்றும் தோள்பட்டை கழுத்து , கைகளில் பலத்த காயமடைந்த திரிஷா ரத்தம் சொட்ட சொட்ட வீதியில் விழுந்து தவித்தார். அவரது காது துண்டாக வெட்டப்பட்ட நிலையில் , தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போதையில் இருந்த கணவன் ரஹ்மத்துல்லாவை மடக்கிப்பிடித்தனர்.

பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய திரிஷாவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இரும்பு குடோனில் வேலை செய்யும் போது திரிஷாவுக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவருடன் ஒன்றாக பைக்கில் சுற்றி வந்ததாக கூறப்படுகின்றது.

இதனை பார்த்த கணவர் ரஹ்மத்துல்லா, அவனுடன் சுற்றாதே என்று கூறி கண்டித்துள்ளார், ஆனால் திரிஷா அதனை கேட்க வில்லை என்றும் இதன் எதிரொலியாக இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement