செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதல் நாளே எட்டப்பட்ட ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு.. 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

Jan 08, 2024 10:52:37 AM

50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனங்களின் பங்கேற்புடன் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கி நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிய ஆலைகளை நிறுவவும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் டாடா, ஹூண்டாய், டி.வி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டன. 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட பிரதிநிகளும், தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை வடிவ சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் வழங்கினார். மேடையில் அமர்ந்திருந்த முதலீட்டாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ள தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி ரூபாயில் மின்வாகன உற்பத்தி ஆலை அமைக்க வின்ஃபாஸ்ட் நிறுவனத்துடனும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பில் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவ டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், ஜே.எஸ்.டபுள்யூ, டி.வி.எஸ். குழுமங்கள் உள்ளிட்டவை ஆலை தொடங்கவும், ஹூண்டாய், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டன.

முன்னதாக, செமிகண்டக்டர் தொழிற்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதனை பெற்றுக்கொண்டார். மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதற்கான தொலைநோக்கு திட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சிறப்புகளை விளக்கும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சிறப்பு வீடியோ திரையிடப்பட்டது.பின்னர், நடனக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் விழா மேடையில் அரங்கேற்றப்பட்டன. மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பர்ய நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதனிடையே, மாநாடு தொடங்கிய முதல் நாளிலேயே 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு எட்டப்பட்டதாகவும்,100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் தமிழக தொழிற்துறை அறிவித்துள்ளது.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement