செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மாட்டு சாணத்தை கரைத்து... போலீஸ் மீது ஊற்றிய பெண் விவசாயி...!!

Jan 05, 2024 10:38:28 AM

தருமபுரி அருகே, தகராறில் உள்ள நிலத்தை அளவீடு செய்யும் பணிக்கு பாதுகாப்பிற்குச் சென்ற காவல்துறை எஸ்.எஸ்.ஐ. மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய்-மகளை போலீஸார் கைது செய்தனர்.

நிலம் அளவீடு செய்யும் பணிக்கு பந்தோபஸ்த்திற்குச் சென்ற இடத்தில் மாட்டுச் சாண கரைசலை காக்கிச் சட்டையில் ஊற்றி அழுக்காக்கினாலும் தனது கடமையைச் செய்த காவல்துறை எஸ்.எஸ்.ஐ. சரவணன் தான் இவர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுக்காரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாலம்மாள். இவருக்கு, அதேப்பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தின் அருகிலேயே சாலம்மாளின் அக்கா முனியம்மாளுக்கும் நிலம் உள்ளது.

இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், தனது நிலத்தை சர்வேயர் மூலமாக முழுமையாக அளந்து விட முடிவு செய்தார் சாலம்மாள்.

நிலத்தை அளவீடு செய்யக்கோரி நல்லம்பள்ளி வட்டாட்சியரிடம் சாலம்மாள் மனு அளித்ததைத் தொடர்ந்து, பாகலஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், சர்வேயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டுகாரம்பட்டிக்குச் சென்றனர். அளவீடு செய்யும் இடத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக தொப்பூர் போலீஸாரும் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தனர்.

நிலத்தை அளவீடு செய்யக் கூடாதென முனியம்மாளும் அவரது மகள் மாதம்மாளும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் நிலத்தை அளவீடு செய்வதே நல்லது என அதிகாரிகள் விளக்கி கூறியும் அதனை தாயும் மகளும் ஏற்கவில்லை.

நிலத்தை அளக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த மாதம்மாள் திடீரென தனது வீட்டிலிருந்த மாட்டுச் சாணத்தை வாளியில் கரைத்து எடுத்து வந்து போலீஸார் முன்னிலையில் சாலம்மாள் மீது ஊற்றினார். அதிர்ச்சியடைந்த போலீஸார், மாதம்மாளிடம் நீ செய்வது தப்பு என எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு சுற்றி இருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் சுற்றி சுற்றி வந்து சாணத்தை ஊற்றி ஆவேசமானார் மாதம்மாள்.

அவரை மடக்கி பிடிக்க முயன்ற தொப்பூர் எஸ்.எஸ்.ஐ., சரவணனின் காக்கி உடை மற்றும் முகத்திலும் சாண கரைசல் ஊற்றப்படவே, அதனை மற்றொரு காவலர் தனது செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்ததோடு, உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

இந்த சாண கரைசல் சம்பவம் குறித்து தொப்பூர் போலீஸில் புகாரளித்தார் நிலத்தை அளவீடு செய்ய வந்திருந்த சர்வேயர் ஜோதி. இதனையடுத்து, சாண கரைசலை ஊற்றிய மாதம்மாள் அவரது தாயார் முனியம்மாளை கைது செய்தனர் தொப்பூர் போலீசார்.

அக்காள்-தங்கை இடையிலான பிரச்னையை தீர்க்கச் சென்ற அதிகாரிகள் மீது சாணத்தை ஊற்றியதால் தற்போது புதிய பிரச்னையில் தாயும்-மகளும் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர் போலீஸார்.

 

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement