செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குழந்தை சாப்பாடு கேட்குது வைக்காமல் திமிரா பேசராங்க.. கோவில் பணியாளர் அன்னதான அட்ராசிட்டி

Jan 04, 2024 06:32:15 AM

கோவை சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு முருகன் கோவிலில் அன்னதானத்தில் சாப்பிட அமர்ந்தவர்களுக்கு சாப்பாடு வழங்காமல் அவதூறாக பேசியதாக கோவில் பணியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட பணியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

அன்னதானத்தில் சாப்பிட அமர்ந்த சிறுவனுக்கு சாப்பாடு கொடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த புகாருக்குள்ளான கோயில் பெண் பணியாளர் இவர் தான்..!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகில் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரட்டுமேடு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர், அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்குவதாக தகவல் அறிந்து குடும்பத்துடன் சாப்பிடச்சென்றுள்ளார்.

அங்கு உணவு பரிமாற வந்த இரு பெண் ஊழியர்கள் யாருக்குமே சரிவர உணவு பரிமாறாமல், பக்தர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசி வந்ததாக கூறப்படுகின்றது. முதலில் கொஞ்சமாக சாப்பாடு வைத்த நிலையில் அதனை சாப்பிட்டு விட்டு ஒரு பெண் மற்றும் சிலர் சாப்பாடு என்று கேட்டுக் கொண்டே இருக்க, பெண் பணியாளர்கள் கேட்காத மாதிரி சென்றதாக கூறப்படுகின்றது.

அபோது ஒரு குழந்தை மறு சாப்பாடு கேட்டதற்கு அதெல்லாம் போட முடியாது எழுந்து போ.. என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த பக்தர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி அந்த பெண் ஊழியரிடம் இப்போ சொல்லுங்கள் என்று கூற சுதாரித்துக் கொண்டு நான் அப்படி சொல்லவில்லையே என்று பெண் ஊழியர் சமாளித்தார்

அந்த பெண் ஊழியர் மீண்டும், யாரிடம் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் யாராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது தேவை என்றால் தின்னுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று அனைவரிடத்திலும் மிகவும் திமிராக கூறியதால் பர பரப்பு உண்டானது

இதனால் பலர் உணவருந்தாமல் இலையில் பரிமாறப்பட்ட உணவை அப்படியே வைத்துவிட்டு வெளியேறி கோவில் நிர்வாகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அதிகார தோரணையில் பேசி அன்னதானத்துக்கு சென்ற பக்தர்களை நோகடித்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு கோவில் அறங்காவலர் புகழேந்தி நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement