செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மெடிக்கல் உரிமையாளர் கொலை! மொட்டை மாடியில் இருந்து குதித்த 3 பேருக்கு மாவுக்கட்டு..! கை, கால் முறிந்ததாக போலீஸ் தகவல்

Jan 02, 2024 03:10:41 PM

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் மெடிக்கல் கடை உரிமையயாளரை மாமூல் கேட்டு வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 3 பேரும், பதுங்கி இருந்த மொட்டை மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற போது கை கால்கள் முறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் மெடிக்கல் கடை உரிமையளர் வினோத்திடம், மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் தருமாறு மிரட்டியதாக ரவுடி சிலம்பரசன் என்பவனை பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மர்ம கும்பலால் மெடிக்கல் கடை உரிமையாளர் வினோத் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் ரவுடி சிலம்பரசனின் கூட்டாளிகள் இருவர் மாத்திரை வாங்குவது போல வினோத்தின் மெடிக்கல் கடைக்கு வந்து நோட்ட மிட்டு சென்றது தெரியவந்தது.

அதனை வைத்து விசாரணையை முன்னெடுத்த போது, மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், வினோத் சாட்சி சொன்னால், தன்னால் ஜெயிலில் இருந்து வெளியே வர இயலாது என்பதால் கூட்டாளிகளை அனுப்பி தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு ரவுடி சிலம்பரசன் மிரட்டியதாகவும், வினோத் முடியாது என்று மறுத்ததால் இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

புளியந்தோப்பை சேர்ந்த கார்டன் சரத் என்பவரை அழைத்து வந்து சிலம்பரசனின் உறவினரான சூர்யாவும், கூட்டாளி திருவேற்காடு மணிகண்டனும் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் மண்ணிவாக்கத்தில் உள்ள பாழடைந்த் கட்டிடம் ஒன்றில் மொட்டை மாடியில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

அந்த கட்டிடத்தில் ஏறி அவர்களை மடக்கிப்பிடிக்க முயன்ற போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதறகாக 3 பேரும் மொட்டை மாடியில் இருந்து குதித்துள்ளனர்.

குதித்த வேகத்தில் இருவருக்கு கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சித்ரா என்று காதலியின் பெயரை பச்சை குத்தியவனுக்கு வலது கையிலும் எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார் அவர்களை மீட்டு தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்து 3 பேருக்கும் மாவுக்கட்டு போட்டு விட்டதாக தெரிவித்தனர்.

மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வினோத்தை கொடூரமாக கொலை செய்ய வேண்டும், அப்போது தான் நம் மீது இருக்கும் பயம் மக்களுக்கு போகாது என்று சிலம்பரசன் கூறியதால், வினோத் மெடிக்கல் ஷாப் மூடிவிட்டு வரும் வரை சாலையில் காத்திருந்து கொலை செய்ததாக சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

மாவுக்கட்டுடன் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி வினோத் என்பவனை தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுருத்தி பணம் பறிக்கும் ரவுடிகள் மீது போலீசார் இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement