செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அலைய விட்ட நிறுவனம்..! சில்லரையை எண்ண விட்ட பஞ்சாயத்து தலைவர்...!!

Jan 01, 2024 08:29:37 AM

சர்வீஸுக்கு விடப்பட்ட காரை குறித்த நாளில் கொடுக்காமல் வாரக்கணக்கில் இழுத்தடித்ததால் விரக்தி அடைந்த ஊராட்சிமன்ற தலைவர் ஒருவர், டொயோட்டா நிறுவனத்துக்கு, சர்வீஸ் கட்டணத்தை சில்லரை காசுகளாகவும், 10 ரூபாய் 20 ரூபாய் நோட்டுக்களாகவும் மூட்டை கட்டி கொடுத்ததால் ஊழியர்கள்  நொந்து போயினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த தொழுதாவூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார் அருள் முருகன். தனது இனோவா காரை சர்வீஸ் செய்வதற்காக பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஹர்ஷா டொயோட்டா கார் கம்பெனியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடுத்துள்ளார் அருள் முருகன்.

பழுதை ஓரிரு நாட்களில் சரி செய்த நிறுவனம், செராமிக் பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறி
பல நாட்கள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. காரை எடுத்துக் கொள்ளலாம் என நிறுவனம் கூறியதால் நேரில் சென்ற பிறகு கார் தற்போது தயாராக இல்லை என்று கூறி அருள்முருகனை 3 முறை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதன் பிறகு, கார் தயாராக இருப்பதாகவும் 36 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டுமென கார் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது. தன்னை கடுப்பேற்றிய நிறுவனத்தை வெறுப்பேற்ற முடிவு செய்த அருள் முருகன், சர்வீஸ் கட்டணத்தை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாகவும் மற்றும் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகளாக ஒரு துணி மூட்டையில் கட்டி எடுத்துச் சென்றார்.

அந்த துணி மூட்டையை பிரித்து சில்லரைகளை அங்குள்ள டேபிளில் கொட்டிய அருள்முருகன், தன்னை அலைக்கழித்ததற்காகவே இந்த சில்லரைகளை தருவதாகவும் இதனை எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

அருள்முருகனை கார் விற்பனை நிறுவனம் சமாதானப்படுத்த முயன்ற போதும், பில் தொகைக்கு இதுதான் பணம் இதனைத் தான் பெற்றுக் கொள்ள வேண்டுமென உறுதியாகக் கூறினார் அருள்முருகன்.

வேறு வழியின்றி நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு காசாக எண்ணி தொகையை சரி பார்த்துக் கொண்டனர். தனக்கு நேரிட்டது போன்ற சங்கடம் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு நாணயங்களை வழங்கியதாக தெரிவித்தார் அருள்முருகன்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement