செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மிக்ஜாம் பாதிப்பில் பாடம் கற்றுக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தென் மாவட்டங்களில் அவதி ஏற்பட்டிருக்காது - எடப்பாடி பழனிசாமி

Dec 26, 2023 07:01:03 PM

மிக்ஜாம் பாதிப்பில் பாடம் கற்றுக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தென் மாவட்டங்களில் அவதி ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, வெள்ள பாதிப்பு பிரச்சினையில் மத்திய அரசை காரணம் காட்டி மாநில அரசு தப்பிக்க பார்ப்பதாக தெரிவித்தார்.

மக்கள் பிரச்சனையை உணர்ந்து தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சேத விவரங்களை கணக்கிடாமல் நாடாளுமன்றத்தில் நிதி கேட்டால் எப்படி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு எந்த காலத்திலும் கொடுத்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் புதிய திட்டங்கள் ஏதும் கொண்டுவரப்படவில்லை என்று கூறிய இ.பி.எஸ்., நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் அமைச்சர்கள் சிலர் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருப்பார்கள் என்றார்.

அடுத்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் சிலரும் அழைக்கப்படுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். உரைக்குப் பின் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி வாள் வழங்கப்பட்டது.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement