செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தவறான உறவுக்குத் தடையாக இருந்த கணவன்.. வாட்சப்பில் திட்டம் தீட்டி தீர்த்துக்கட்டிய மனைவி...! வெளிநாட்டில் இருந்தவாறு கொலைக்குத் திட்டம்

Dec 25, 2023 03:44:52 PM

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, தனது ஆண் நண்பரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்தவாறே வாட்சப் மூலம் கொலைக்கான திட்டம் தீட்டிய ஆண் நண்பரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்...

காட்டுமன்னார்கோவிலில் இருந்து மேல வன்னியூர் செல்லும் சாலையில் கடந்த 19ஆம் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ரத்த வெள்ளத்துடன் கிடப்பதாக குமராட்சி காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் இறந்து போனவர் மேல வன்னியூர் தெற்குதெருவைச் சேர்ந்த மாமல்லன் என்பது தெரியவந்தது.

சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமல்லன் மனைவி நாகலட்சுமியிடம் விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், தனது தவறான உறவுக்கு கணவர் இடையூறாக இருந்ததால், திட்டம்போட்டு அவரைக் கொன்றது தெரியவந்தது. நாகலட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த, தங்கபாண்டியன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் தங்கபாண்டியனுடன் நாகலட்சுமி அடிக்கடி பேசி வந்த நிலையில், விஷயம் தெரியவந்து மாமல்லன் மனைவியைக் கண்டித்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாத நாகலட்சுமி, தங்கபாண்டியனுடன் வீடியோ காலில் பேசுவதையும் வழக்கமாக்கியுள்ளார்.

இரண்டு குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி அறிவுரை கூறியும் கேட்காததால், நாகலட்சுமியின் செல்போன்களை வாங்கி உடைத்துப் போட்டுள்ளார் மாமல்லன். அப்படி இதுவரை 4 செல்போன்களை அவர் உடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் கணவன் மீது ஆத்திரம் அடைந்த நாகலட்சுமி, விரைவில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரவிருக்கும் தங்கபாண்டியனிடம் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என வாட்ஸ் அப் கால் மூலம் கூறியுள்ளார். தங்கபாண்டியனும் ஊரில் இருக்கும் தனது நண்பர்கள் இளம் வேந்தன், ராஜகுரு ஆகியோரை ஏற்பாடு செய்து மாமல்லனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் ராஜகுரு சட்டக்கல்லூரி மாணவன் என்று கூறப்படுகிறது.

மாமல்லனின் வழக்கமான செயல்பாடுகளை இரண்டு மாதங்களாக ரகசியமாகக் கண்காணித்து, 19ஆம் தேதி அவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது பின் மண்டையில் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. நாகலட்சுமி உட்பட மூவரையும் கைது செய்த போலீசார், வெளிநாட்டில் உள்ள தங்கபாண்டியனைப் பிடிக்க இந்திய தூதரகம் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement