செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் வண்ணமயமான தேவாலயங்கள்.. களைகட்டிய கிறிஸ்துமஸ் நள்ளிரவு கொண்டாட்டங்கள்.. ஹேப்பி கிறிஸ்துமஸ்..!

Dec 25, 2023 06:23:49 AM

தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின. தேவாலயங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 

சென்னை சாந்தோம் புனித தோமையார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி ஆராதனை நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு ஆங்கில மொழியிலும் இரவு 11.30 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின்போது குழந்தை ஏசுவின் சொரூபம் குடிலில் உள்ள தொட்டிலில் வைக்கப்பட்டது.

சென்னை பெசண்ட் நகர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்று சிறப்பு கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். 

புதுச்சேரியில் புனித ஜென்மராக்கினி தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சேலம் நான்கு ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவு நடந்த சிறப்பு திருப்பலியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. விண்மீன் ஆலயத்தில் உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். 

இதேபோல், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement