செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அப்போ கொலைகார காதலர்கள் இப்போ காதல் தம்பதியர்களாம்..! 10 வருடம் தேடிப்பிடித்த போலீஸ்..! கணவரை கார் ஏற்றிக் கொன்ற மனைவி

Dec 23, 2023 08:46:22 AM

10 வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக ஊழியரை கார் ஏற்றி கொலை செய்தவழக்கில் கைதாகி காதலனுடன் சிறை சென்ற பெண், ஜாமீனில் வெளி வந்ததும் காதலனுடன் தலைமறைவாகி கேரளாவில் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்தி வந்த கொலைகார காதலர்கள் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சம்பத் என்பவர் கடந்த 30- 8- 2013 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கார் விபத்தில் பலியானதாக கூறப்பட்டது.
இதனை திறன் பட புலனாய்வு செய்த அப்போதைய சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்
ராஜாராம், தகுந்த சாட்சியத்துடன் நடந்தது விபத்து இல்லை, திட்டமிட்ட கொலை என்பதை கண்டறிந்தார்.

சம்பத்தின் மனைவி கிரண் ரூபணி என்பவருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியதாகவும், இதற்கு இடையூறாக இருந்த கணவர் சம்பத்தை , முட்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அமீர்பாஷா என்பவரின் உதவியுடன் கார் ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து என நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் , நீதிமன்ற பினை பெற்று வெளியே சென்ற 3 பேரும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால், மூவருக்கும் சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. 10 ஆண்டுகளாக பிடியானையை நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் இருந்ததால் வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாத நிலையில் இருந்தது .

இந்நிலையில் ராஜாராம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றவுடன் தலை மறைவு குற்றவாளிகளான 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்

தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த தனிப்படை போலீசார் விழுப்புரம் , மங்கலம்பேட்டை, சென்னை கன்னியாகுமரி , பெங்களூரு போன்ற இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஓட்டுனர் அமீர் பாஷவை தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் , கிரண் ரூபிணி ஆகியோர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கணவன் மனைவி போல தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றதும் உஷாரான இருவரும் அங்கிருந்து பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர்.
பெண் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், பெங்களூர் சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடூர கொலையாளிகளாக பார்க்கப்பட்டவர்கள், ஜாமீனில் வந்து தலைமறைவானதும் பெயரை மாற்றிக் கொண்டு வேறு மாநிலத்தில் கணவன் மனைவியாக வசித்து வந்த நிலையில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்ட இருப்பது குறிப்பிடதக்கது.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement