நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நிலவரம் கட்டுக்குள் இருப்பதாக அம்மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தாமிரபரணியில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்