செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செத்த பிறகும் ஏண்டா இப்படி? புதைக்கவிடாமல் அலையவிடறீங்க.. நச்சுன்னு குட்டு வைத்த கோர்ட்டு..! கண் தானம் செய்தவருக்கு கிடைத்த மரியாதை

Dec 17, 2023 08:44:21 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்று நோயால் உயிரிழந்த நிலையில், கண் தானம் செய்த பெண்ணின் சடலத்தை கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் புதைக்கவிடாமல் தடுத்ததற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, மதவழக்கப்படி ஊர் மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டது.

புற்று நோய் உயிரை கொண்டு போனாலும், தான் இறப்புக்கு பின்னரும் கண்கள் பார்வை கொடுக்க வேண்டும் என்று கண் தானம் செய்த மேரி சுபா ரேவிதா என்கிற இந்த பெண்ணின் சடலத்தை புதைக்க இடம் கொடுக்காமல் அலைக்கழித்ததால் பாதிரியாருக்கு எதிராக நடந்த போராட்டம் தான் இவை..!

கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவரது மனைவி மேரி சுபா ரேவிதா .இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன் புற்று நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேரி சுபா ரேவிதா புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

அவரது கண்கள் இரண்டும் தானமாக வழங்கபட்ட நிலையில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். உயிரிழந்த ரேவிதாவின் உறவினர் ஒருவருக்கும் பிள்ளைத்தோப்பு ஊர் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள நில தகராறை காரணம் காட்டி அவரது உடலை கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் புதைக்க ஊர் நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மேரி சுபா ரேவிதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நாகர்கோவிலுக்கு சென்று ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயர் தரப்பிலிருந்து அவர்களுக்கு முறையான பதில் கிடைக்காததால் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர் அங்கும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அன்று மாலை அழிக்கால் பிள்ளை தோப்பு சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஊர் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் ரேவிதாவின் உடலை சின்னவிளை மீனவ கிராமத்தில் அடக்கம் செய்வதற்காக அவரது உடலை உறவினர்கள் எடுத்து சென்றனர் அங்கும் அடக்கம் செய்ய இடம் அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்டு அலக்கழிக்கப்பட்ட நிலையில் அவரது சடலத்தை வீட்டருகே உள்ள பட்டா நிலத்தில் அடக்கம் செய்யும் நிலை ஏற்ப்பட்டது.

இதனை தொடர்ந்து மீனவர் ஜெகன் தனது மனைவியின் உடலை கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் நல்லடக்கம் செய்ய உத்தரவிட கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், மேரி சுபா ரேவிதா உடலை 16-ம் தேதி காலை 10-மணியில் இருந்து 12-மணிக்குள் தோண்டி எடுத்து கிறிஸ்தவ முறைப்படி பிள்ளைத்தோப்பு ஊர் மயானத்தில் நல்லடக்கம் செய்ய மாவட்ட ஆட்சி தலைவர், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் பிள்ளைத்தோப்பு ஆலய பாதிரியார் மற்றும் ஊர் துணை தலைவருக்கு உத்தரவிட்டதோடு இறுதி சடங்கு முடிந்த பின் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட ரேவிதா உடல் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் கோட்டாச்சியர் சேதுராம லிங்கம், டிஎஸ்பி தங்கராமன் தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு திருப்பலியுடன் கிறிஸ்தவ முறைப்படி ஊர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மகள் மற்றும் உறவினர்கள் உரிய தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றத்திற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement