செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாள் ஏந்தி வம்பு ரவுடி பாட்டில் மணி கூட்டாளிகளுக்கு மாவுக்கட்டு..! ஓவர் அலும்பு உடம்புக்கு ஆகாது

Dec 17, 2023 12:55:47 PM

திருச்சி சமயபுரம் பகுதியில் ரவுடிகள் சிலர் கஞ்சா போதையில் ஒருவரை வாளால் தாக்கி கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியான நிலையில் சமயபுரம்  போலீசாருக்கு பயந்து ஓடிய இரு ரவுடிகளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

இப்பல்லாம் ஆம்பிள பசங்களா இருந்தாலும் இந்த கஞ்சா கும்பல் விடுவதில்லை. சிக்கினா சித்ரவதை தான்...!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கொம்பன் ஜெகன் திருச்சி மாவட்ட போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

ரவுடி ஜெகனின் கூட்டாளியான பாட்டில் மணி என்பவர் மீதும் கொலை அடிதடி கொள்ளை என இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

எங்கே போலீசார் தன்னையும் என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்று பயந்து பாட்டில் மணி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய நிலையில், திருச்சி மாவட்ட போலீசார் பாட்டில் மணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பாட்டில் மணியின் கூட்டாளிகள் ஐந்து பேர் சேர்ந்து கஞ்சா போதையில், பயங்கர ஆயுதங்கள் வாள் மற்றும் அரிவாளுடன் காளி ராஜ் என்பவரை மிரட்டி ஆயுதத்தால் அடித்து ஆடைகளை களைய சொல்லி துன்புறுத்தும் வீடியோ வெளியானது.

பாட்டில் மணியின் கூட்டாளிகள் என்ற தைரியத்த்ஜில் காளி ராஜை கத்தியை காட்டி மிரட்டி அழைத்துச்சென்று அவரது செல்போன், பணத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த கஞ்சா கும்பலின் சித்ரவதையில் இருந்து தப்பிய காளிராஜ், திருச்சி மாவட்ட காவல்துறை தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவித்ததின் பேரில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் இச்சம்பவம் குறித்து லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டது கவியரசன், யுவராஜ், ரவி போஸ்கோ, அய்யனார் வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் என தெரிய வந்துள்ளது.

சமயபுரம் அடுத்துள்ள இருங்களூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் காளிராஜை அழைத்துச்சென்று அங்கு வாள் மற்றும் அரிவாளால் அடித்ததும், ஆடைகளை களைந்தும் கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது.

சமயபுரம் போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்ய முயன்ற போது இருவர் தப்பி ஓடிய போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த போலீசார் கவியரசன் யுவராஜ் அய்யனார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement