செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மாணவி சுனிதா உயிரிழப்பு விவகாரம் : பள்ளிமுதல்வர் - 7 ஆசிரியர்கள் மீது வழக்கு..! டிசியை வாங்கிச் செல்ல தந்தையிடம் கூறியதால் மகள் விபரீத முடிவு

Dec 16, 2023 07:27:52 AM

விழுப்புரம் அருகே, அரையாண்டு தேர்வில் பார்த்து எழுதியதாகவும், சரியாகப் படிக்காததால் டிசியை வாங்கிச் செல்லுமாறும் தந்தையிடம் பள்ளி ஆசிரியர்கள் கூறியதால் 12 ஆம் வகுப்பு மாணவி அவமானம் தாங்காமல் மாணவி விபரீத முடிவை தேடிக் கொண்ட நிலையில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் ராமகிருஷ்ணா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சுனிதாவின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம் செய்த காட்சிகள் தான் இவை..!

விழுப்புரம் அடுத்த காணையைச் சேர்ந்தவர் நேதாஜி. இவரது மகள் சுனிதா விழுப்புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி பள்ளியில் அரையாண்டு தேர்வு தமிழ் பாடத்தேர்வு நடந்தது. மாணவி சுனிதா தேர்வில் பிட் பேப்பர் பார்த்து எழுதியதாக பள்ளி தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி அவரது தந்தை நேதாஜிக்கு பள்ளியில் இருந்து போன் செய்து அவரை பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதன்படி மறுநாள் நேதாஜி தனது மகள் சுனிதாவுடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரிடம் ஆசிரியர்கள் சிலர், உங்களது மகள் சரியாக படிப்பதில்லை, உங்கள் மகளால் எங்களுக்கு தேர்ச்சி சதவீதத்தை சரியாக காட்ட முடியாது, இனி உங்கள் மகளுக்கு இப்பள்ளியில் படிக்க இடம் கிடையாது, பள்ளி மாற்றுச் சான்றிதழை வாங்கிவிட்டு செல்லுங்கள் என்று திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவி சுனிதா, வியாழக்கிழமை காலை தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட தாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலின்பேரில் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவியின் உடல், பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வோம் என்று பெற்றோர் கூறினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் சடலத்தை பெற்றுக் கொண்டனர்.

மாணவியின் தந்தை நேதாஜி, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பள்ளி முதல்வர், 5 ஆசிரியைகள், 2 ஆசிரியர்கள் என 8 பேர் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement