செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ப்ரியான்னா... பிளவர்ன்னு.. நெனச்சியா... ரவுடி பேபிடா.. ரொமான்ஸ் கில்லர் கைது.!

Dec 15, 2023 08:07:40 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தன்னை சந்திப்பதை தவிர்த்த காதலனை வீடுதேடிச்சென்று சவால் விட்டு, கூலிப்படையை ஏவி தீர்த்துக் கட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சிவன் கோவில் தெருவை சார்ந்தவர் பிரியா. கணவர் லட்சுமணனுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் பிரியா அவரை பிரிந்து மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பிரியாவுக்கு, பொன்னேரி பாலாஜி நகர் தெருவை சார்ந்த கொரியர் விநியோகிக்கும் பணியாற்றி வந்த கோபாலகிருஷ்ணன் என்பவருடன் காதல் மலர்ந்தது.

தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்ததாகவும், அதன் பின் கோபாலகிருஷ்ணன், பிரியாவை சந்திப்பதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து கோபாலகிருஷ்ணனின் வீடு தேடிச்சென்ற பிரியா, அவரது உறவினர்களிடம் கோபாலகிருஷ்ணன் தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக கூறி கடுமையாக திட்டியதாக தெரிகிறது.

கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து இன்னும் ஒரு மணி நேரத்தில் என்ன ஆகப்போகிறான் பாருங்க... என சவால் விட்டு மிரட்டி விட்டு பிரியா அங்கிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரிந்து கோபாலகிருஷ்ணன் பிரியாவை தேடிச்செல்ல, வழியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது கோபாலகிருஷ்ணனை தரக்குறைவாக திட்டிய பிரியா தன்னுடன் வந்த 4 பேரை ஏவி, அவனை வெட்டுங்கடா எனக் கூறியதாகவும், உடனே அவருடன் இருந்தவர்கள் கோபாலகிருஷ்ணனை ஓட ஓட வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. உயிருக்கு போராடிய கோபாலகிருஷ்ணனை மீட்டு ஆட்டோவில் ஏற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். திருமணம் கடந்த உறவை நாடிய பெண்மணியை தேடிச்சென்ற இளைஞர் பரிதாபமாக உயிர் விட்டிருப்பதாகவும் போலீசார் கூறினர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement