செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண் பொறியாளர் கொலை! கூண்டோடு கம்பி எண்ண போகும் மாமியார் குடும்பம்..!! பச்சிளம் குழந்தை முன் கொடூரம்

Dec 14, 2023 06:26:20 AM

கோபிசெட்டி பாளையம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் சாப்ட்வெர் என்ஜினீயரை கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்து விட்டு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இறந்து விட்டதாக நாடகமாடியதாக கணவன் குடும்பத்தாரை போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

கோபிசெட்டிப்பாளையம் அருகே பூமாண்ட கவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி. இவர் பொறியியல் கல்லூரியில் படித்த போது, சின்னியம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் மதன் குமார் என்பவரை காதலித்துள்ளார். ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார அந்தஸ்த்து காரணமாக இவர்களது காதலை பூரணியின் பெற்றோர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. எனினும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன் மதன்குமாரை பூரணி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் உள்ள நிறுவனங்களில் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வந்தனர். கருவுற்றதும் சின்னியம்பாளையத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்துவிட்ட பூரணிக்கு 5 மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

கடந்த அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது பூரணி திடீரென மயங்கி விழுந்ததாக கூறி கவுந்தப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பூரணியை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பரிசோதித்த மருத்துவர்கள், பூரணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து பூரணியின் சடலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில், பூரணி தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறி இறக்கவில்லை என்பதும், கழுத்து நெறிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்ததால் பூரணியின் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர்

மர்ம மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு பூரணி கணவன் மதன்குமார், மாமியார் பூங்கொடி மாமனார் யுவராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கவுந்தபாடி போலீசார் தேடி வந்தனர். ஒத்தகுதிரை என்ற ஊரில் உறவினர்கள் வீட்டில் பழங்கி இருந்த மதன்குமாரின் குடும்பத்தை கைது செய்து விசாரித்த, சொத்துக்காக நடந்த கொடூர சம்பவம் அம்பலமானது.

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த பூரணி தமது பெற்றோரிடம்,சொத்தில் பங்கு எதுவும் வேண்டாம் எனக்கூறிவிட்டதாக தெரிகிறது. பூரணிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்து, மகளையும், பேத்தியையும் பார்க்க பூரணியின் பெற்றோர் சென்ற போது சொத்து விவகாரத்தை சுட்டிக்காட்டி அவர்களை மதன்குமாரும், அவரது குடும்பத்தினரும் தடுத்து நிறுத்தி சண்டையிட்டு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. பலமுறை சொத்தை பிரித்து வாங்கி வருமாறு மனைவி பூரணியிடம், மதன் குமாரும், அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியபோதும் அதை பூரணி ஏற்க மறுத்ததாகவும் தெரிகிறது.

பூரணியின் பெற்றோரிடம் இருந்து சொத்து கிடைக்காது என முடிவு செய்த மதன்குமார் சம்பவத்தன்று, பூரணியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடியதாக தெரிவித்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மூவரையும் கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக நடந்த கொடூர கொலையால் பச்சிளம் குழந்தை தாயை இழந்து பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement