செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...

Dec 02, 2023 11:08:26 AM

காணாமல் போனதாக பெரம்பலூர் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரை 15 நாட்களாக போலீஸார் தேடி வரும் நிலையில், கோவையில் கேட்பாரற்று நின்ற அவரது காரில் ரத்தக்கறை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை கிடந்ததால் அவரது நிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தீபா. அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியராக குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசன் பணியாற்றி வருகிறார். நவம்பர் 15 ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்கள் இருவரும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாயமான ஆசிரியர்கள் குறித்து 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த சில வருடங்களாகவே நண்பர்களாக பழகி வந்த ஆசிரியர்கள் இருவரும், அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியை தீபா உள்பட பலரிடம் பல லட்ச ரூபாய் பெற்ற வெங்கடேசன் அந்த பணத்தை திருச்சி தில்லைநகரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதில், தன்னிடமிருந்து வெங்கடேசன் பெற்ற 22 லட்சம் ரூபாயை கடந்த சில மாதங்களாகவே திருப்பி கேட்டு வந்துள்ளார் தீபா. இந்த நிலையில் தான் ஆசிரியர்கள் இருவரும் மாயமானது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையே, தீபாவின் ரெனால்ட் க்விட் கார் கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் இரண்டு நாட்களாக கேட்பாரற்று நிற்பதாக, தீபாவின் கணவர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் அளித்த தகவலின் பெயரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான தனிப்படையினர் அங்குச் சென்று காரில் சோதனை நடத்தினர்.

காரில் ரத்தக்கறை படிந்த நிலையில் ஒரு சுத்தியல், கத்தி, தீபாவின் தாலி, குண்டு, கொலுசு, உடை, ஏடிஎம் கார்டு மற்றும் வெங்கடேசனின் இரண்டு செல்போன்கள் இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், ஆசிரியர் வெங்கடேசனின் உறவினர்களான ராஜாபிரபு, ஆனந்த் மற்றும் கோவையைச் சேர்ந்த மோகன் ஆகியோரிடம் ஆசிரியர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ள இந்த வழக்கில் ஆசிரியர் வெங்கடேசன் பிடிபட்டால் மட்டுமே பல முடிச்சுகளுக்கு விடை கிடைக்கும் என்பதால் அவரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர் போலீஸார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement