செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Dec 01, 2023 07:02:06 PM

ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சரை அழைத்துப் பேசி தீர்வு காணுமாறும் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கக் கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தமிழக பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதற்கு, அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் படி, ஒரு மசோதா தொடர்பாக ஆளுநருக்கு முன் 3 தேர்வுகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, ஒன்று, மசோதாவுக்கு அனுமதி அளிக்கலாம், அல்லது அதை நிலுவையில் வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்று கூறியது. இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்த பின், 4-வதாக ஒரு தேர்வை ஆளுநர் மேற்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், தமிழகத்தை பொருத்த வரை முதலிலேயே மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்துவிட்டதால், தற்போது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தது.

குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் பதவிக்கு வருவதால் அவரது அதிகார வரம்பு பெரியது என்று சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், ஆளுநரை பொருத்தவரை அவர் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர் என்பதால் மூன்று தேர்வுகளில் ஒன்று மட்டுமே அவருக்கு உண்டு என்று கூறியது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை பேரவை மீண்டும் நிறைவேற்றினால், அதற்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்கக் கூடாது என்று அரசியல் சாசன சட்டத்தின் 200-வது பிரிவு குறிப்பிடுவதாகவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல், தமிழகத்தில் நிலவும் இக்கட்டான நிலையை தீர்க்க ஆளுநர் உறுதி செய்யுமாறு யோசனை தெரிவித்த தலைமை நீதிபதி, ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே நிறை விஷயங்களுக்கு தீர்வு காண வேண்டிய இருப்பதாக கூறினார். ஆளுநரும் முதலமைச்சரும் அமர்ந்து பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று யோசனை தெரிவித்த அவர், முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் வழக்கை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement