செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிடித்த நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற கொள்ளையன்..! 200 சவரனுடன் தப்பியவனை முழுவீச்சில் தேடும் போலீசார்..!!

Nov 29, 2023 07:59:04 AM

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்து, ஷாப்பிங் செய்வதைப் போல நின்று நிதானமாக தனக்குப் பிடித்த சுமார் 200 சவரன் நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை 100 அடி சாலையில் உள்ளது, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை. இந்த கடைக்கும் அதற்கு வலது பக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடத்துக்கும் இடையே சிறிய சந்து ஒன்றுக்கு உள்ளது. ஒல்லியான நபர் மட்டுமே நுழையக் கூடிய இந்த சந்தின் வழியாக நள்ளிரவு நேரத்தில் மேலே ஏறிய மர்ம நபர் ஒருவர், முதல் தளத்தில் உள்ள குளிர்சாதன கருவி வெண்ட் வழியாக நகைக் கடைக்குள் புகுந்திருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடைக்குள் சென்றதும் கையில் பட்டதையெல்லாம் அள்ளாமல், ஒவ்வொரு கவுண்ட்டராக சென்று தனக்குப் பிடித்த வளையல், கம்மல், ஜிமிக்கி, சங்கிலி போன்ற நகைகளை மட்டும் மர்ம நபர் தேர்வு செய்து எடுத்துச் சென்றிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

சுமார் 200 சவரன் நகைகளை கொள்ளையைடித்த பின், தனது முகத்தில் அணிந்திருந்த மாஸ்க், சட்டை ஆகியவற்றை நகைக் கடைக்கு வெளியிலேயே கழற்றிப் போட்டுவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றதாக கூறியுள்ள போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட நபர் வழக்கமான திருடன் அல்ல என்றும் புதிய நபராக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், 5 தனிப்படைகளை அமைத்து மர்ம நபரை தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

நகைக் கடையின் இடது புறத்தில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதில் பணியாற்றுபவர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement