செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மதுரை பெருங்குடி பகுதியில் திடீரென ஊர் புகுந்து சிறுவன் உட்பட ஐந்து பேரை வெட்டிய மர்ம நபர்கள் போலீசார் விசாரணை

Nov 28, 2023 04:28:37 PM

மதுரை அவனியாபுரம் அருகே சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் 3 பேரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு ஓடிய நிலையில், அவ்வழியாக எதேச்சையாக வந்த 2 பேரை கத்திக் குத்து பட்ட இளைஞர்களின் ஆட்கள் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருங்குடி கிராமத்தில் ஊர் மையப் பகுதியில் அமர்ந்து கணபதி, விஜய் குட்டி, அஜித் ஆகியோர் பேசிக் கொண்டிருந்த போது அங்கு பைக்கில் வந்த 2 பேர், யார் பெயரையும் குறிப்பிடாமல், அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

யாரை கேட்கிறீர்கள் என்று அந்த இளைஞர்கள் விசாரித்துக் கொண்டிருந்த போதே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பைக்கில் வந்தவர்கள் சரமாரியாக குத்தி விட்டு, தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இளைஞர்களின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் கட்டை, அரிவாளுடன் ஊர் மையப் பகுதியில் திரண்டனர்.

அதே நேரத்தில், பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது 13 வயது மகனை பைக்கில் அவ்வழியாக அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

இளைஞர்களை தாக்கியது அந்த இருவராக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட கிராம மக்கள், தந்தையையும் மகனையும் வழிமறித்து வெட்டியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த 5 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Advertisement
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement