செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதியோர் உதவித் தொகை வரவில்லை.. ஆட்சியர் காலில் விழுந்து கதறிய பெண்மணி..!

Nov 28, 2023 08:32:11 AM

மயிலாடுதுறையில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க கோரி வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிவளாகத்தில் 80 வயதான முதியவர் ஒருவரை ஊன்றுகோலுடன் நடக்க முடியாத நிலைமையில் கைத்தாங்கலாக அவரது மனைவி ஒரு கையில் பிடித்து மெல்ல அழைத்து வந்தார்.

ஒரு கையில் கணவர், மறுகையில் மனுவுடன்அந்த தம்பதியர் நடக்க முடியாமல் நடந்து வந்த காட்சி காண்போரின் மனதை நெகிழச் செய்தது. இதனை கண்ட செய்தியாளர்கள் அவர்களை கைத்தாங்கலாக மனு கொடுக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வெளியே வந்த மாவட்ட ஆட்சியரை கண்ட மூதாட்டி அவரது காலில் விழுந்து முதியோர் உதவித் தொகை வரவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

விசாரணையில் அவர்கள் திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த சின்னையன் மற்றும் கனியம்மாள் என்பதும் கடந்த சில மாதங்களாக கணவருக்கு முதியோர் உதவித் தொகை வராமல் நிறுத்தி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனியம்மாள், 2 மகன்களில் ஒருவர் உயிரிழந்து விட, தாங்கள் இருவர் மட்டும் தனியாக முதியோர் உதவித் தொகையை மட்டும் வைத்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து தனி வட்டாட்சியரை அழைத்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர்களை அலையவிடாமல் முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement