செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் தடையால் வெண்ட்டிலேட்டர் செயலிழந்து பெண் இறந்ததாக புகார்

Nov 27, 2023 02:04:12 PM

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 48 வயது பெண் ஒருவர், மின் தடை ஏற்பட்டதால் வெண்ட்டிலேட்டர் கருவி செயலிழந்து இறந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த அமராவதி என்ற அப்பெண், சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர சிகிச்சை பிரிவில் வெண்ட்டிலேட்டர் கருவி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மறுநாள் ஞாயிறன்று மாலை 3-50 மணி வாக்கில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்தில் வெண்ட்டிலேட்டர் கருவி லோ-பேட்டரி என்ற எச்சரிக்கையை காட்டியதாகவும் அமராவதியின் மகன் கூறியுள்ளார்.

அது பற்றி மருத்துவர்கள், செவிலியர்களிடம் தாங்கள் தெரிவித்த போதிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் மாலை 4-05 மணிக்கு அமராவதி இறந்து விட்டதாக அவரது மகன் மருத்துவமனை டீனிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமராவதி, காச நோயால் நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக திருவாரூர் அரசு மருத்துவமனை டீன் ஜோசஃப் ராஜ் கூறியுள்ளார்.

மின்தடை ஏற்பட்டு ஏழே நிமிடத்தில் ஜெனரேட்டர் மூலம் மீண்டும் மின் இணைப்பு தரப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அமராவதியுடன் அனுமதிக்கப்பட்டு வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் நலமுடன் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement