செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மச்சி வேணாண்டா... கேட்காமல் குதித்த என்ஜினீயர் அணையில் மூழ்கிய பரிதாபம்..! உதகை நீச்சல் விபரீத காட்சிகள்

Nov 21, 2023 05:18:29 PM

நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள் கூட உதகை அணையில் குளிப்பது ஆபத்தானது என்று எச்சரித்தும், கேட்காமல் உள்ளே குதித்த கோவை சாப்ட்வேர் என்ஜினியர் நீரில் மூழ்கி உயிரிழந்த திகிலூட்டும் காணொளி வெளியாகி உள்ளது.

உதகை அணையில் எச்சரிக்கையை மீறி குளித்து உயிரை பறிகொடுத்த காட்சிகள் தான் இவை..!

நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகன் ராம்குமார். 28 வயதான இவர் கோவையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்தார்.

உதகையை அடுத்த அத்திகல் பகுதியில் உள்ள இவருடைய நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை ராம்குமார் தனது நண்பர்கள் சுமார் 10 பேருடன் சென்றிருந்தார்.

திருமணத்திற்கு அத்திகல் செல்லும் முன்னர் உதகை - கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட் பகுதியில் உள்ள காமராஜர் அணையின் பின்பக்கம் தண்ணீர் சேரும் இடத்தில், நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க சென்றார்.

அப்போது திடீரென்று தண்ணீரில் குதித்த ராம்குமார் நீந்தி சென்று குளித்து மகிழ்ந்தார். அவரை ஆபத்தான பகுதி குளிக்க வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் எச்சரித்தனர்.

கேட்காமல் அணையில் நீச்சல் அடித்த ராம்குமார் ஒரு கட்டத்தில் கரைக்கு திரும்பலாம் என்று நினைத்தபோது அவரால் வர முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவர் தண்ணீரில் தத்தளித்தவாறு சத்தம் போட்டபோது அவர்களுடைய நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால், அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை.

இதனால் சுமார் 50 அடி ஆழமான பகுதியில் ராம்குமார், தனது நண்பர்களின் கண்முன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து புதுமந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம், நீலகிரி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் அரி பரந்தாமன், நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அணையில் மூழ்கி இறந்த ராம்குமாரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் கூறுகையில், நீரில் மூழ்கி இறந்த ராம்குமாருக்கு நன்றாக நீச்சல் தெரிந்துள்ளது. ஆனால் சமவெளி பகுதியில் இருப்பது போல் நீலகிரியில் இருக்காது, இங்கு தண்ணீரின் அடர்த்தி அதிகம், குளிர்ச்சியும் அதிகம் என்பதால் அவரால் நீந்தி கரைக்கு வர முடியவில்லை, இதனால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார், எனவே நீலகிரியில் உள்ள நீர் நிலைகளுக்குள் குளிப்பதற்காக செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்தார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement