செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இரவு மட்டும் தங்கிட்டு போறோம்.. தொழில் கடன் கட்டாததால் வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..! நடுத்தெருவில் தவித்த குடும்பம்

Nov 21, 2023 01:50:15 PM

கோவையில் வீட்டை அடமானமாக வைத்து பெற்ற வங்கிக் கடன் நிலுவை தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதால், கடன் வாங்கியவர் குடும்பத்துடன் வீதியில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

கோவை சின்ன வேடம்பட்டி குட்டை தோட்டம் பகுதியில் ட்ரோமோஸ் சாப்ட் என்ற கம்பெனியை கணேஷ் ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். இவர் சிஎன்சி இயந்திரம் மற்றும் விஎம்சி இயந்திரங்கள், வால்வுகளுக்கான உதிரி பாகங்களை தயார் செய்து கொடுத்து வருகிறார்

இவர் தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ந்தேதி, ஆர்.பி.எல் என்ற அழைக்கப்படும் ரத்னா நகர் பேங்க் லிமிடெட் வங்கியில் , தனது தந்தை பெயரில் உள்ள வீட்டின் பத்திரத்தை அடமானமாக கொடுத்து ஒரு கோடியே 31 லட்சத்து 77 ஆயிரம் கடனாக பெற்றார். இந்த கடனுக்காக மாதாந்திர தவணைத் தொகையாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை 2020 மார்ச் மாதம் வரை தவறாமல் செலுத்தினார். மொத்தம் 55 லட்சத்து 83 ஆயிரம் செலுத்திய நிலையில், 2020 ஏப்ரல் முதல் கொரானாவால் முடங்கிய
கணேஷ் ஆனந்தால் கடனுக்கான தவணையை திருப்பி கட்ட முடியவில்லை.

தொழில் பாதிப்பு வந்ததால் அரசு வழங்கிய ஆறு மாத கால அவகாசம் முடிந்ததும் வங்கி அவருக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல் படி ஏற்கனவே பெற்ற கடன் தொகையில் 20 சதவீதத்தை கூடுதல் தொழில் கடனாக வழங்குவதாக கூறி,9 லட்சத்து 53 ஆயிரத்து 63 ரூபாயான அந்த தொகையை ஏற்கனவே பெற்ற கடனுக்காக வங்கியே எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கணேச ஆனந்த் தனது கடனை மறு சீரமைப்பு செய்து தரக் கூறிய நிலையில், வங்கியாளர்கள் அதற்கு மறுத்து அவர் மேல் சர்ஃபேசி சட்டத்தின் மூலம் அவரது அடமான சொத்தை பறிமுதல் செய்வதற்கு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் நடவடிக்கை ஈடுபட்டனர். அதன் படி இரு முறை குறைந்த பட்ச தவணை தொகை செலுத்தி வங்கி நடவடிக்கையை தவிர்க்க நீதிமன்றம் வழிவகை செய்தது. அந்த பணத்தையும் கணேஷ் ஆனந்தால் செலுத்த முடியாத நிலையில் சம்பவத்தன்று வங்கி அதிகாரிகள் மாலை நேரத்தில் கணேஷ் ஆனந்தின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று வீட்டில் இருந்தவர்களை முழுமையாக வெளியேற்றினர்.

அப்போது இன்று ஒரு நாள் இரவு மட்டும் தங்கள் வீட்டில் தங்கி விட்டு செல்வதாக அவர்கள் கூறிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

கணேஷ் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

கோவை சிறு குறு தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிறுகுறு தொழில் முனைவோர் பெற்ற கடன்களுக்காக வங்கிகள் சர்ஃபேசி சட்டத்தின் மூலம் சொத்துக்களை பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

வங்கிகளில் பெற்ற கடனை முறையாக செலுத்த தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் அடமானமாக வைத்த சொத்துக்களை இழக்க நேரிடும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement