செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆஜரான தலைமை பொறியாளர்.. முத்தையாவின் பகீர் கடிதம்.. வெளியான புதிய தகவல்..!

Nov 21, 2023 06:42:58 AM

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

தமிழகம் முழுவதும் மணல் அள்ளப்படும் விவகாரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு முத்தையாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

சம்மனை ஏற்றுக்கொண்ட அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியவில் ஆஜரானார். மணல் குவாரிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் செயல்படும் 28 மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து அளிக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து, முத்தையா விரிவான வாக்குமூலம் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிர விசாரணையில், ஏராளமான போலி ரசீதுகள், போலி கியூ-ஆர் ஸ்கேனர்கள், மணல் குவாரியில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகள், இஸ்ரோ மூலம் பெறப்பட்ட அளவீடுகள், சுங்கச்சாவடிகளில் பதிவான லாரிகளின் ட்ரிப் பட்டியல் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

முறைகேடான வகையில் மணல் அள்ளப்பட்டுவருவதாகவும், தனக்கும் இது குறித்த புகார்கள் வந்துள்ளதாகவும் கூறி அக்டோபர் மாதம், அவருக்கு கீழ் பணியாற்றும் நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். துறையில் இருக்கும் அழுக்குகளை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டதாக அவர் கூறியிருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறப்பட்டது.

நீர்வளத்துறை பொறியாளர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில், தாங்கள் வெறும் கருவிகள் தான், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தான் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறியிருப்பதாகவும், அதனால், 10க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புவது குறித்த ஆலோசனையில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement