செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓடும் காரில் எட்டிப்பார்த்த பாம்பு.. பதறி அடித்து ஸ்விப்ட் காரை கழட்டி பார்த்தால் காத்திருந்த டுவிஸ்ட்..!

Nov 19, 2023 10:25:11 AM

ஓடும் காரில் எட்டிப்பார்த்த பாம்பை கண்டு மிரண்டு போன ஓட்டுனர் , சாலையோரம் காரை நிறுத்தி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், 2 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின்னர் மெக்கானிக்குகளை அழைத்து நல்லா இருந்த காரை , பார்ட் பார்ட்டாக கழட்டி வீசும் நிலை ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவர் தனக்கு சொந்தமான மாருதி சுசுகி ஷிப்ட் சொகுசு காரில் சகோதரர் மணிகண்டனை அழைத்துக் கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள கார் பழுதுபார்க்கும் இடத்திற்கு தனது காரை பழுது பார்ப்பதற்காக சென்றார். காரை மணிகண்டன் ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது புதுப்பேட்டை பகுதியில் கார் சென்றபோது காரின் உள்பக்கம் முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு ஒன்று தலையை நீட்டியபடியே டக்கென்று வெளியே வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் காரை சாலையின் ஓரம் அவசரமாக நிறுத்தி விட்டு இறங்கி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் பாம்பை தேடத்தொடங்கினர்

தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மெக்கானிக்குகளை வரவழைத்து காரை பல பாகங்களாக பிரித்து போட்ட பின்னரும் காருக்குள் பாம்பை காணவில்லை

தண்ணீரை பீய்ச்சி அடித்து பாம்பை பிடிக்கும் நூதன முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் எங்கோ பதுங்கிக் கொண்டது. பாம்பு கிடைக்காத ஏமாற்றத்தில் தீயணைப்பு துறையினரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

பழுது பார்க்க சென்ற வழியில் பார்ட் பார்டாக காரின் உள்பாகங்கள் கழற்றப்பட்டதால் காரை எடுத்துச்செல்லலாமா? வேண்டாமா ? என்று தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் ராஜேந்திரன்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement