செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அண்ணனின் 35,000 ரூபாய் திருட்டு 6 வயது அண்ணன் மகனுக்கு விஷம் கலந்த டிபன் பாக்ஸ்... தன் வினை தன்னையே சுட்டது

Nov 19, 2023 07:32:58 AM

எழுதப்படிக்க தெரியாத அண்ணனிடம் 35 ஆயிரம் ரூபாய் திருடியதை திசை திருப்புவதற்காக அவரது 6 வயது மகனுக்கு பள்ளிக்கே சென்று விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்ய முயன்றவர், தனது குட்டு வெளிப்பட்டதால் மீதமிருந்த விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் காவனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் அதேப் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரத்தின் 6 வயது மகன் குருதேவ். பள்ளியில் வைத்து மதிய உணவு சாப்பிட்ட போது மயங்கி விழுந்ததாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் குருதேவ்.

மதிய உணவு இடைவேளையின்போது சிறுவன் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட்ட போது, கசப்பாக இருப்பதாகவும் துர்நாற்றம் விசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கும் போதே மயக்கமடைந்து கீழே விழுந்தான் சிறுவன்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான் சிறுவன். உணவை யார் கொண்டு வந்தார்கள் என்ற விசாரணையில் இறங்கிய போது, பாலசுந்தரத்திற்கு தம்பி உறவு முறை கொண்ட கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பது தெரிய வந்தது.

மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை உணவில் கலந்து அந்த டிபன்பாக்ஸை சிறுவனிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

போலீஸாரின் விசாரணையில், கடந்த மாதம் பாலசுந்தரத்தின் வீட்டிலிருந்த ஏ.டி.எம்., கார்டை எடுத்துச் சென்ற மணிகண்டன் அவருக்கு தெரியாமல் 35 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக கூறப்படுகிறது. விவசாய தேவைக்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்ற போது கணக்கில் பணம் இல்லையென வங்கி நிர்வாகம் தெரிவித்ததால் சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பாலசுந்தரம்.

பணம் திருடப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்து விடுவார்கள் என பயந்த மணிகண்டன் அதனை திசை திருப்புவதற்காக பாலசுந்தரத்தின் மகனை கொலை செய்ய முடிவெடுத்து விஷம் கலந்த உணவை வழங்கியது தெரிய வந்தது. திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தான் கைது செய்யப்பட்டு விடுவோம் என பயந்து மீதமிருந்த பூச்சி மருந்தை குடித்து வீட்டிலேயே மணிகண்டன் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்தனர் போலீஸார்.

திருட்டு, திருட்டை மறைக்க கொலை என இறங்கி இறுதியில் தனது உயிரையே இளைஞர் மாய்த்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement