செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பஸ் கவிழ்ந்து 4 குழந்தை சாகக்கிடக்கு.. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு? அதிகாரியை லெப்ட் ரைட் வாங்கிய மக்கள்..! சாலையை அகலப்படுத்தாத அலட்சியம்

Nov 16, 2023 12:57:38 PM

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோ.மாவிடத்தல் கிராமசாலையை அகலப்படுத்த பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அதில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 4 குழந்தைகள் காயம் அடைந்ததால் ஆவேசமான பொதுமக்கள் அதிகாரியை சுற்றிவளைத்து கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

கிராம இணைப்புச்சாலையை அகலப்படுத்தாமல், அலட்சியம் காட்டியதால், பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விட்டதாக கூறி அதிகாரியை பொதுமக்கள் வறுத்தெடுக்கும் காட்சிகள் தான் இவை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ. மாவிடந்தல் கிராமத்துக்கு செல்லக்கூடிய கிராம இணைப்பு சாலை மழையின் காரணமாக சேதம் அடைந்து குறுகிய நிலையில் உள்ளதாக கூறி பல முறை அந்த ஊர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது. ஆனால் அந்த சாலையை அகலப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் அந்த சாலையில் குழந்திகளை ஏற்றிக் கொண்டு பயணித்த பள்ளி வாகனம், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது சாலையிலிருந்து விலகி விளை நிலத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் நான்கு பள்ளி குழந்தைகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த அரசு அதிகாரியை , வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர்

தான் பார்வையிட வந்திருப்பதாக சமாளித்த அதிகாரியிடம் அங்க 4 குழந்தைகள் சாக கிடக்கு, உங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு ? என்று கடுமையாக சாடினர்

இதன் தொடர்ச்சியாக கோ. மாவிடந்தல் கிராம சாலையை விரிவுபடுத்த வேண்டும் சீர் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்து விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் வைக்கும் கோரிக்கைகளின் தேவை அறிந்து அவற்றை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement