செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாணவியை கடத்திய காரை 40 கிமீ வேகத்தில் விரட்டிய போலீசார்.. சாவகாசமாக தப்பிய காதல் ஜோடி..! சினிமாவை மிஞ்சும் சிரிப்பு போலீஸ் காட்சிகள்

Nov 16, 2023 07:51:51 AM

சங்கரன்கோவில் அருகே காரில் பெண்ணை கடத்திச்செல்வதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் பைக்கில் மெதுவாக காரை விரட்டிச்சென்று மடக்குவதற்குள்,இளைஞர் அந்த பெண்ணுடன் தப்பி ஓடி விட்டதால், போலீசார் காரை பறிமுதல் செய்து ஓட்டுனரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவியை கடத்திச்செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட காரை சாவகாசமாக விரட்டிச்செல்லும் காமெடி காட்சிகள் தான் இவை..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆண்டார்குளத்தை சேர்ந்தவர் சாத்தையா இவரது மகள் கௌரி. கல்லூரி மாணவியான கவுரியை அதே ஊரைச்சேர்ந்த மனோஜ்குமார் காரில் கடத்திச்செல்வதாக கார் எண்ணுடன் தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வகன சோதனையில் ஈடுபட்ட சங்கரன் கோவில் போலீசார் சம்பந்தப்பட்ட கார் மறித்தனர், அந்த கார் நிற்காமல் சென்றதால் பைக்கில் விரட்ட தொடங்கினர்

பிக்கப் இல்லாத அந்த கார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அந்த காரை விரட்டிச்சென்ற காவலர்கள், 40 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்குகளில் சாவகாசமாக பின் தொடர்ந்து சென்றனர்.

போலீசாருக்கு போக்கு காட்டிய கார் ஓட்டுனர் வளைவு ஒன்றில் காரை நிறுத்தி மனோஜ்குமார் மற்றும் கவுரியை இறக்கிவிட்ட பின்னர் மெதுவாக சென்றார். ஒருவழியாக அந்த காரை மடக்கிப்ப்பிடித்த போலீசார் காருக்குள் எவரும் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்

கார் ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது, கவுரி கடத்தப்படவில்லை என்பதும் மனோஜ்குமாரும், கவுரியும் காதலர்கள் என்றும் ஓட்டுனர் போலீசில் தெரிவித்தார். பள்ளியில் படிக்கும் போதே கவுரியை காதலித்து அழைத்துச்சென்று திருமணம் செய்த சம்பவத்தில் மனோஜ்குமார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது கவுரிக்கு 18 வயது பூர்த்தியானதால், மீண்டும் அழைத்துச்சென்றதாக ஓட்டுனர் தெரிவித்தார். இதையடுத்து இளம் பெண்ணை தேடுவதை போலீசார் கைவிட்டனர்

போலீசார் மறித்தும் நிற்காமல் போக்கு காட்டியதால் காரை பறிமுதல் செய்ததோடு ஓட்டுநரையும் விசாரணைக்காக தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் போலீசார் செய்த இந்த சிரிப்பு சேஷிங் சம்பவத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement