செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உங்க பங்காளி சண்டைக்கு நாங்க தக்காளி தொக்கா...? நாய்களிடம் மாட்டிய கார்

Nov 12, 2023 09:50:38 AM

கோவையில் காருக்குள் புகுந்த பூனையை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் 2 கார்களின் பேனட் மற்றும் மின் இணைப்பு வயர்களை தெரு நாய்கள் கடித்துக் குதறி வீசிச் சென்றதால் காரின் உரிமையாளர்கள் பல ஆயிரங்களை செலவு செய்யும் நிலை ஏற்பட்டது.

கோவை பி.என்.புதூரில் ராதிகா அவென்யூவில் உள்ள தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஜோஸ். காலையில், வெளியே வந்து பார்த்த போது காரின் முன்பக்க பகுதிகள் ஆங்காங்கே உடைந்து கிடந்ததோடு, வயரிங் அமைப்புகள் சிதைந்த நிலையில் கிடந்தன.

விஷமிகள் யாராவது செய்த வேலையாக இருக்குமோ என நினைத்த ஜோஸ், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த போது, சில நாய்கள் சுற்றி சுற்றி வந்து காரை ஆக்ரோஷமாக கடித்துக் குதறியது பதிவாகியிருந்தது.

அப்பகுதியில் ஓடி வந்த பூனை ஒன்று ஜோஸின் காருக்கு அடியில் அடைக்கலமாக சென்று பதுங்கிக் கொள்ள, நாய்களோ காரை சுற்றி சுற்றி வந்தன. பூனையை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விட வேண்டுமென நினைத்து அது பதுங்கிய பேனட் பகுதியை துவம்சம் செய்தன. ஆனாலும், பூனை நாய்களுக்கு போக்கு காட்டி விட்டு அடுத்தத் தெருவிற்கு தப்பியோடியது.

அடுத்த தெருவில் அருண்பிரசாத் என்பவரின் கியா காருக்கு அடியில் புகுந்துக் கொண்டது அந்த பூனை. விடாமல் துரத்திய நாய்களோ அந்த கியா காரையும் துவம்சம் செய்து விட்டு தோல்வியோடு திரும்பிய வழியில், மற்றொரு டூவீலர் சீட்டையும் சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

கார் வாங்கி 6 மாதத்தில் முதல் சர்வீஸ் கூட விடாத நிலையில் தனது காரை நாய்கள் சேதப்படுத்தியதாக கூறினார், கார் ஓனர் அருண்பிரசாத்.

பெருகி வரும் தெரு நாய்களை உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement