செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா.? புட்டு மாவுல கட்டியிருப்பாங்களோ ? தொட்டாலே உதிருது... யார் பொறுப்பு..? பூரா சுவரும் பேட்ச் ஒர்க்..!

Nov 10, 2023 08:04:25 AM

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆட்சி விளாகம் பகுதியில் மத்திய மாநில அரசுகளின் நிதியின் கீழ் இருளர் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள 80 தொகுப்பு வீடுகள் , தொட்டால் உதிரும் புட்டு போல தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கையை வைத்து தேய்த்தாலே பட்டுன்னு... புட்டு மாவு மாதிரி உதிரும் சுவரைக்கொண்ட இந்த அதிசய கட்டுமானம் செங்கல்பட்டில் இருந்து 69 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள ஆட்சிவிளாகம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ,கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில் மத்திய மாநில அரசு நிதியின் கீழ் இருளர்களுக்கு 30 வீடுகள், தமிழ்நாடு அரசு மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில், திருநங்கைகளுக்கு 50 வீடுகள் கட்ட கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 5 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 80 வீடுகள் கட்டப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்த நிலையில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வீடுகள் தரமற்றதாகவும் கை வைத்தாலே பெயர்ந்து விழுவதைப் பார்த்து பயனாளிகள் குற்றம் சாட்டியதால் திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் வீடுகள் முழுமையாக சரிபார்த்து பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதன் படி அனைத்து வீடுகளுக்கும் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. சரிபார்ப்பு செய்யப்பட்ட பின்னரும் வீடுகள் புட்டு மாவு போல் பெயர்ந்து கொட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பயனாளிகள்.

தரமற்ற கட்டுமான பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளதால் அந்த வீடுகள் இப்படி உள்ளதாகக் கூறப்படும் நிலையில் , தனிக் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு இதனைக் கட்டிய ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , இந்த வீடுகள் அனைத்தும் ஊராட்சி நிர்வாகத்தால் கட்டப்படுவதாகவும் உரிய அமைச்சரிடம் கூறி பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறிச்சென்றார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement