செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெல்ட்டால் அடித்தனர்.. கைகொட்டி சிரித்தனர்..! 5 மணி நேர சித்ரவதை கொடுமையை விளக்கிய மாணவன்

Nov 09, 2023 09:46:42 PM

கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் விடுதியில் உள்ள அறையில்  5 மணி நேரம் அடைத்து வைத்து, தலையில் மொட்டை அடித்தும், முதுகில் பெல்ட்டால் அடித்தும் , சுற்றி நின்று கைகொட்டி சிரித்து சித்ரவதை செய்ததாக, ராகிங் கொடுமைக்குள்ளான மாணவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் பீளமேட்டிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் ராகிங் கொடுமைக்கு உள்ளானார் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் மாணவர் ஒருவர். பாதிப்பிற்குள்ளான மாணவரின் புகாரில் 7 பேரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்த போலீஸார். தலைமறைவான வெங்கடேஷ் என்ற மாணவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்

போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் மாணவனுக்கு நிகழ்ந்த பல்வேறு கொடுமைகள் விவரிக்கப்பட்டு கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. தனது அறையில் இருந்து இழுத்துச்சென்று அவர்கள் அறையில் வைத்து அடைத்து, சீனியர்கள் பணம் கேட்டால் தரமாட்டியா என்று கூறி பெல்டாலும், கல்லூரி வழங்கிய ஐ.டி கார்டாலும் மாணவனை முதுகில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். அப்போது, ஸ்டார்ட் மியூசிக் என ஒருவர் சவுண்ட் விட மற்றவர்கள் சுற்றி நின்று ஆரவாரம் செய்து கைதட்டிக் கொண்டே ட்ரிம்மரால் முடியை மழித்துள்ளனர். கீழே விழுந்த முடியை அதே மாணவனை முட்டிப் போட்டுக் கொண்டே எடுத்து குப்பையில் போட வைத்தும் கொடுமையின் உச்சத்தை அரங்கேற்றியுள்ளது ராகிங் கும்பல்.

5 மணி நேரமாக ராகிங் கும்பல் கேலியும், கிண்டலும் செய்துக் கொண்டே தங்களுடன் படிக்கும் சக மாணவனை ராகிங் சித்ரவதை செய்ததோடு வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த மாணவன் தனது அறைக்குச் சென்று அழுதபடியே தூங்கி உள்ளான். பின்னர் தனது தாய் தந்தைக்கு போன் செய்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியதாகவும், தனது முதுகில் ரத்தங்காயங்களும், ஆங்காங்கே வீக்கங்களும் இருப்பதை பார்த்த மற்ற மாணவர்கள் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட பிறகே ராகிங் கொடுமையின் கோரமுகம் மற்றவர்களுக்கு தெரிய வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement