செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பி.எஸ்.ஜி கல்லூரியில் ராகிங்.. பொறியியல் படிப்பும் போச்சு, கல்லூரி வாழ்க்கையும் போச்சு .. மொட்டை மாணவர்களுக்கு கையில காப்பு..!

Nov 10, 2023 08:06:27 AM

கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் விடுதியில் மது அருந்த பணம் கேட்டு இரண்டாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவர்கள் சேர்ந்து மொட்டை அடித்து ராகிங் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

கையில் கிடைத்த துணியாலும்... துண்டுப்பேப்பராலும் முகத்தை மூடியபடி ... வெட்கப்பட்டாலும், மிளா போல நடந்து செல்லும் இவர்கள் தான் ஓசிக்குடிக்கு காசு தரமறுத்த இரண்டாம் ஆண்டு மாணவனை மொட்டை அடித்த சீனியர் டவுசர் பாய்ஸ்..!

கோவை அவிநாசி சாலையில் பிரபலமான பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. தமிழகத்தில் புகழ் பெற்ற கல்லூரியான இங்கு இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை கடந்த 6 ஆம் தேதி அதே கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் பொறியியல் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த மாணவர் பணம் தர மறுக்கவே 7 சீனியர் மாணவர்கள் சேர்ந்து இரண்டாமாண்டு மாணவருக்கு டிரிம்மரை வைத்து தலைமுடியை மழித்து மொட்டை அடித்து, நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து ராகிங் கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது. 

இந்த சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோருக்கு தெரியவரவே உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 7 மாணவர்களையும் கைது செய்து பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த மாணவர்கள் மீது ராக்கிங் செய்தல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேறு மாணவர்களுக்கும் இவர்களால் ராகிங் பிரச்சனை உண்டானதா ? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, கல்லூரி நிர்வாகம் ராக்கிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 மாணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

படிக்கின்ற காலத்தில் படிப்பை மறந்து மதுவுக்கு அடிமையானால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த ராக்கிங் சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement