செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மது போதையில் காரை ஓட்டி விபத்து.. அபராதத்திற்கு அஞ்சி போக்கு காட்டிய மதுப்பிரியர்..!

Nov 06, 2023 01:09:37 PM

திண்டிவனம் அருகே மது போதையில் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய ஆந்திர ஆசாமி, போலீசாரின் DD சோதனையின்போது, அபராதத்திற்கு அஞ்சிய அந்த நபர் Breath Analyser-ல் சரியாக ஊத மறுத்து போக்கு காட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த வம்சி என்பவர் அவரது நண்பரின் திருமணத்தை முன்னிட்டு போட்டோ ஷூட் எடுப்பதற்காக திருமண ஜோடிகளை அழைத்துக் கொண்டு நண்பர்கள் சிலருடன் காரில் புதுச்சேரி வந்துள்ளார். போட்டோ ஷூட் முடிந்து, மதுபோதையில் காரை ஓட்டி சென்ற வம்சி திண்டிவனம் அருகே விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த தப்பி செல்ல முயன்ற வம்சியை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் போலீசார் பொதுமக்களிடமிருந்து வம்சியை மீட்டு காவல் நிலையம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பொது மக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து வம்சியை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவர் ஓட்டி வந்த காரையும் எடுத்து சென்றனர். தொடர்ந்து அங்கு Breath Analyser கருவி உதவியுடன் வம்சியிடம் போலீசார் குடி தொடர்பான பரிசோதனையை மேற்கொண்டனர். அப்போது அபராதத்திற்கு அஞ்சிய வம்சி போலீசாரின் மது சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். இறுதியில் ஒரு வழியாக வம்சியிடம் DDக்கான Breath Analyser சோதனை போலீசார் முடித்தனர்.

இதற்கிடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Advertisement
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement