செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இதை சாப்பிட்டா கொடைக்கானலே தலைகீழா தெரியுமாம்..! பார்சல் சர்வீஸும் இருக்காம்பா..!

Oct 31, 2023 08:27:33 AM

கொடைக்கானலுக்கு டிரெக்கிங் ஆசையில்  கூட்டாளிகளுடன் சுற்றுலா செல்லும் வெளிமாநில இளைஞர்களை குறிவைத்து ஆசைவார்த்தைகள் கூறி மேஜிக் மஸ்ரூம் விற்றுவந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சாவை மிஞ்சும் போதைக்காளன் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

போதை ஏற்றிக் கொண்டு மலைப்பகுதியில் ஜீப்பின் பேனட்டிலும் , டாப்பிலும் தொற்றிய படி விபரீதமாக டிரெக்கிங் செல்வதற்கு என்றே சிலர் கூட்டாளிகளுடன் கொடைக்கானலுக்கு வருகின்றனர்

கொடைக்கானலின் நகரப்பகுதியை விட்டு ஊருக்கு ஒதுக்கு புறமாக சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடில்களை தேடிச்சென்று தங்கும் இந்த இளைஞர்களின் சொர்க்கபுரி வட்டக்கனல்..! என்று கூறப்படுகின்றது. காரணம் அங்கு தான் போதை ஏற்றும் மேஜிக் மஸ்ரூம் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது.

இங்கு விளைகின்ற ஒருவகை காளானை எடுத்து காயவைத்து சாப்பிட்டால் அந்த போதை முழுமையாக மூளையை விட்டு விலக 2 நாட்கள் ஆகும் என்கின்றனர். இதனை விற்கும் ஆசாமிகள் , இதை சாப்பிட்டால் கொடைக்கானலே தலைகீழாக தெரியும், முயற்சித்து பாருங்கள் என்று ஆசைவார்த்தைக்கூறி இளைஞர்களிடம் இந்த போதைக் காளானை கொண்டு சேர்ப்பதாக கூறப்படுகின்றது. கேரள மற்றும் கர்நாடக இளைஞர்கள், கருவாட்டை தேடி அலையும் திருட்டுப்பூனை போல வட்டக்கனல் மலைப்பகுதிகளில் போதைக்காளானை தேடி அலைவதாகவும், கோக்கர்ஸ் வாக், ஏழு ரோடு சந்திப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த போதை காளனை சிலர் சுற்றுலாபயணிகளை அணுகி நேரடியகவே விற்று வருவதாகவும் புகார்கள் எழுந்தது.

இதனை தொடர்ந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் நீண்ட கலமாக அங்கு சுற்றுலா வழிகாட்டி போல போதை காளான் விற்று வந்த சாலமன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரது வீட்டில் இருந்து 300 கிராம் எடையுள்ள போதைக்காளனை கைப்பற்றினர். அவரது மனைவி ஜெயந்தி மகள் விக்டோரியா ஆகியோர் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் ஆர்டர் பெற்று, ஆன் லைன் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போதை காளனை பேக்கிங் செய்து, கொரியர் மூலம் அனுப்பி வைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது

 




Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement