செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம்.. பெற்ற தாயே குழந்தையைக் கொன்று நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம்..!

Oct 29, 2023 05:59:29 PM

தேனி மாவட்டம் கம்பத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவத்தில், பெற்ற தாயே குழந்தையைக் கொன்று நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த மணிகண்டன் - சினேகா தம்பதியினருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக கம்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற சினேகா குழந்தை பிறந்த பிறகும் அங்கேயே தங்கி இருந்து வருகிறார்.

கடந்த 22-ஆம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில்,சினேகா மற்றும் அவரது பாட்டி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பாட்டி அருகே உள்ள கடைக்கு சென்று விட, தாம் குளிப்பதற்காக சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும் சினேகா கூறியுள்ளார்.

இதனை அடுத்து காணாமல் போன குழந்தையை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்த பால்கேன் ஒன்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாயிடம் நடைபெற்ற விசாரணையில் குழந்தையை தண்ணீரில் மூழ்கவைத்து கொன்றது தாம் தான் என சினேகா ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை பராமரிப்பது சிரமமாக உள்ளதாகவும், கணவருக்கு வலிப்பு நோய்க்காக தொடர்ந்து மருத்துவம் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார் சினேகா.

மருத்துவம் மற்றும் குழந்தையை பராமரிக்கும் செலவால் குடும்பத்தில் வறுமை அதிகளவில் ஏற்படுவதாகவும் தொடர்ந்து குழந்தை வீட்டில் அழுது கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்ததாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட தொடர் மனஅழுத்தத்தின் காரணத்தால் குழந்தையை கேனுக்குள் முக்கி சினேகா கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement