செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காவியக் கவிஞர் வாலி - திரையிசையில் எளிமையும் ஆழமும்

Oct 29, 2023 06:00:55 PM

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வாலிக்கு இன்று 92 வது பிறந்தநாள். எளிய சொற்களில் உயர்ந்த கருத்துகளை பாடல்வரிகள் மூலம் விதைத்த காவியக் கவிஞரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்...

தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர் கொடிகட்டிப் பறந்தபோது அவரது படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள்தான் இவை. வாலியின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால், எம்ஜிஆர் அவரையே தனது படங்களுக்கு பாட்டெழுத வைத்தார். படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 63 படங்களுக்கு வாலி பாடல்களை எழுதியிருக்கிறார்.

சிவாஜி கணேசன் நடித்த 70 படங்களுக்கு பாடல்களை எழுதியவர் வாலி. அன்புக்கரங்கள், உயர்ந்த மனிதன், பாரதவிலாஸ் போன்ற திரைப்படங்களில் அவர் எழுதிய பாடல் வரிகள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றன.

திரைப்படப் பாடல்களில் உயர்ந்த தத்துவக் கருத்துகளை எளிய வரிகளில் எழுதியவர் கவிஞர் வாலி. தத்துவம் மட்டுமின்றி காதலிலும் வாலியின் வரிகள் இளைஞர்களுக்கு புதையல்களாக உள்ளன.

ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் படங்களில் ஏராளமான பாடல்களை எழுதியதுடன், சிவகார்த்திகேயன் வரை ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வைத்ததில் வாலிக்கு முக்கியப் பங்கு உண்டு

கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, வேதா, சங்கர் கணேஷ்,இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களுக்கு வாலியின் பாடல் வரிகளுக்கு எளிதாக இசையமைத்தனர்.

சின்னஞ்சிறு சொற்கள், அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் எளிய வரிகள்...ஆனால் உயர்ந்த கருத்துகள்...இப்படி 15 ஆயிரம் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி.

அவதார புருஷன், பாண்டவர் பூமி போன்ற புத்தகங்களை எழுதியுள்ள வாலி, சில படங்களில் நடித்திருப்பதுடன், திரைப்பட வசனங்களும் எழுதியுள்ளார். 2007ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

காலம் மாறும் போதும் சிலரின் சாதனைகள் மறைவதே இல்லை. தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை வாலியின் பாடல்வரிகளும் அப்படித்தான்.

 


Advertisement
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement