செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கடன் வாங்கியவரின் நடு வீட்டில்... கட்டில் போட்டு படுக்கை... 3 நாட்களாக சிறை வைத்த கும்பல்...!

Oct 21, 2023 10:37:17 AM

ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்குள் கட்டில், பீரோ, ஃபிரிட்ஜ் உடன் நுழைந்து குடியேறிய கந்து வட்டி கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரை கத்தி முனையில் சிறை பிடித்து 3 நாட்களாக வைத்திருந்த நிலையில், திண்டுக்கல் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து குடும்பத்தினரை மீட்டனர்.

மாமியார் வீட்டிற்கு புதுகுடித்தனம் செல்லும் மருமகள் சீதனம் எடுத்துச் செல்வது போல கட்டில், பீரோ, சோபா, சமையல் பாத்திரங்களை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரின் நடு வீட்டில் இறக்கி வைத்து விட்டு குடியேற உள்ளதாக அட்ராசிட்டியில் ஈடுபட்டனர் கந்து வட்டி கும்பல் ஒன்று.

திண்டுக்கல்லைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான திண்ணப்பன் என்பவர் காரைக்குடியை சேர்ந்த ராஜகருப்பையா என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 4 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும், அதற்கு இரண்டு கோடி ரூபாய் அசலும் 12 கோடி ரூபாய் வட்டியும் கட்டியதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள தொகையை உடனே செலுத்தக் கோரி ராஜகருப்பையாவின் ஆதரவாளர்கள் கடந்த 17ம் தேதி திண்ணப்பனின் வீட்டிற்குள் புகுந்து குடியேறியதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் பீரோ, கட்டில், ஃபிரிட்ஜ் மற்றும் சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து இறக்கியதாக தெரிவித்தனர் திண்ணப்பன் குடும்பத்தினர்.

கத்தி முனையில் திண்ணப்பனின் மனைவி, மகன், மருமகள், 2 குழந்தைகளை சிறை வைத்ததோடு, செல்போன்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டதோடு, இரண்டு கார்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

கார்களை திண்டுக்கல்லிலிருந்து காரைக்குடிக்கு எடுத்துச் செல்வதற்கு டீசல் போட வேண்டுமென மிரட்டி தன்னிடமே பணத்தை வாங்கினர் என தெரிவித்தார் திண்ணப்பன்.

வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு சிறை பிடித்ததோடு, குழந்தைகளை மிரட்டி அறையில் அடைத்ததோடு, பெண்களை தரக்குறைவாக திட்டியதாக தெரிவித்தார் திண்ணப்பனின் மருமகள் லட்சுமி.

வாங்கிய கடனுக்கு ஈடாக சொத்தை எழுதித் தருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறி வீட்டை விட்டு நைசாக வெளியேறிய திண்ணப்பன், உறவினர்கள் மூலமாக இரவு நேரத்தில் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனை சந்தித்து தனது நிலையை விளக்கினார்.

எஸ்.பியின் உத்தரவைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீஸார், திண்ணப்பனின் வீட்டில் கட்டில் போட்டு படுத்திருந்த ராஜகருப்பையாவின் ஆட்கள் எனக் கூறப்படும் ரவி, சரவணன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டிலிருந்த பணம், நகை, கார் ஆகியவற்றை அபகரித்து சென்றுள்ளதாக தெரிவித்த திண்ணப்பன், தான் ஏற்கனவே கையெழுத்து போட்டு வைத்திருந்த ஏராளமான வங்கி காசோலைகளையும் அந்த கும்பல் எடுத்துச் சென்று விட்டதாகவும் எஸ்.பியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தை கந்து வட்டிக்கும்பல் மூன்று நாட்களாக சிறை வைத்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement