செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

டிரான்ஸ்பர் ஆர்டரை திரும்ப பெறலைன்னா தலையை அறுத்துருவேன்..! பெண் தாசில்தாருக்கு பகிரங்க மிரட்டல்

Oct 20, 2023 08:05:28 AM

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நான்கு தலையாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெறாவிட்டால்,  தலையை அறுத்து விடுவோம் என்று பெண் தாசில்தாருக்கு தலையாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

4 தலையாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பை தாசில்தார் சுமதிக்கு எதிராக சீவலப்பேரி தலையாரி முருகன் மிரட்டல் விடுத்த காட்சிகள் தான் இவை..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் சுமதி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தலையாரிகளாக உள்ள உமாபதி, முத்துக்குமார், முத்துராமலிங்கம், சுப்பிரமணியன் ஆகிய நான்கு பேரை அருகே உள்ள வேறு பகுதிகளுக்கு இடம் மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதில் முத்துராமலிங்கம் செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் கடத்தலுக்கு, உதவியதாக எழுந்த புகாரின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை மாலை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் தலையாரிகள் சங்க மாநில செயலாளர் பிச்சி குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய தலையாரி சங்க மாவட்ட தலைவர் சீவலப்பேரி முருகன் என்பவர் வட்டாட்சியர் சுமதியை தர குறைவாக பேசியும் இட மாறுதலை ரத்து செய்யாவிட்டால் அவரது தலையை அறுத்து விடுவோம் என்று பேசியதால பரபரப்பு ஏற்பட்டது

தாசில்தாரையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி மிரட்டல் விடுத்ததால் அருகில் நின்றவர்கள் உஷாராகி மைக்கை வாங்க முயன்றதாகவும், சீவலப்பேரி முருகன் தொடர்ந்து கொச்சையாக பேசியதாகவும் கூறப்படுகின்றது

இந்நிலையில் வட்டாட்சியர் சுமதி , தனக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், தலையாரி சீவலப்பேரி முருகனை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement