செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு வினாடி தூக்கம்.. அமாவாசை பூஜைக்கு சென்ற 7 பேர் உயிர் பலியான விபரீதம்..!

Oct 16, 2023 08:24:07 AM

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை பூஜையில் சாமிகும்பிட்டு விட்டு கர்நாடகாவுக்கு சென்ற கார், லாரி மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது. ஒரு வினாடி தூக்கத்தால் நிகழ்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் மேம்மலையூனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி கும்பிட கர்நாடகாவில் இருந்து 8 பேர் ஒரு காரில் வந்தனர்.

அமாவாசை பூஜையில் பங்கேற்று சாமி கும்பிட்டுவிட்டு காரில் கர்நாடகா திரும்பினர்.

செங்கம் பக்கிரி பாளையம் புறவழிச்சாலையில் கார் வந்த போது எதிரில் வந்த லாரியுடன் நேருக்கு நேராக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சதிஷ், அவரது மகன்கள் சித்தார்த், சர்வேஷ் மற்றும் சென்னப்பன், மலர் மணிகண்டன், ஹேமந்த்குமார் ஆகிய 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த காவியா என்ற பெண்ணிற்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் பலியான சதீஷ் மற்றும் அவரது மகன்கள் சித்தார்த், சர்வேஷ் ஆகியோரின் உடல்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

மீதமுள்ள சென்னப்பன், மலர், மணிகண்டன் ஹேமந்த்குமார் ஆகியோரின் உடல்கள் கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

இறந்தவர்களின் உடல்களுக்கு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அமரர் ஊர்தியில் அவர்களது உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கார் ஓட்டுனர் ஒரு வினாடி கண் அசந்ததால் கார் நிலை தடுமாறி லாரியுடன் நேருக்கு நேராக மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

தொலைத்தூர பயணத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தூக்கம் வந்தால் , வாகனத்தை ஏதாவது பெட்ரோல் நிலையத்தில் ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொள்வது இது போன்ற கோர விபத்துக்களை தடுக்கும் என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement