செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆன்ட்டி ஹீரோவா ஆவின் ஊழியர்.. அடித்து தூக்கிய லவ்வர் பாய்..! காதலால் கம்பி எண்ணும் கவிதா..!

Oct 12, 2023 08:13:22 AM

திருவாரூர் அருகே விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட ஆவின் ஊழியர், மருத்துவ கல்லூரி மாணவியின் தாயை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த சேந்தங்குடியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராகுல் திருவாரூர் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாங்குடியில் இருந்து ஆந்தக்குடி செல்லும் சாலையில் வாஞ்சியூர் சாலை ஓரத்தில் ராகுல் சடலமாக கிடந்தார். அருகில் பைக் கிடந்ததால் அவர் விபத்தில் இறந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது

ராகுலை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த வெட்டுக்காயம் இருப்பதால் விபத்தில் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியதையடுத்து , ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தகாவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில் நாகை மாவட்டம் ஆந்தக்குடியை சேர்ந்த மருத்துவ மாணவியின் வீட்டிற்கு ராகுல் அடிக்கடி சென்று வந்ததை கண்டுபிடித்த போலீசார் அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் பொருந்தாக்காதல் விவகாரத்தால் நிகழ்ந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

திருமணமாகாத 29 வயது இளைஞரான ஆவின் ஊழியர் ராகுல், மருத்துவ மாணவியை காதலிப்பதாக ஊரே நினைத்திருக்க, அவரோ மாணவியின் தாய் கவிதாவை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஆந்தக்குடி வீட்டில் சந்தித்துக் கொண்டதை கண்டு, மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த உறவுக்கார இளைஞர் நந்தா எரிச்சல் அடைந்துள்ளார். இது குறித்து கேட்டு மாணவியின் தாய் கவிதாவிடம் கேட்டு சண்டையிட்டுள்ளார். தான் விலக நினைத்தாலும் ராகுல் விட மறுப்பதாக கவிதா கூறியதால், ஆத்திரம் அடைந்த நந்தா , கடந்த 9ந்தேதி ராகுலின் வீடுதேடிச்சென்று கவிதாவுடனான காதலை கைவிடுமாறு மிரட்டி உள்ளார். ராகுலின் வயதுக்கு மீறிய காதல் விவகாரம் அறிந்து வீட்டில் உள்ளவர்களும் கண்டித்துள்ளனர்.

சொல்பேச்சு கேட்க மறுத்த ராகுல் சம்வத்தன்று கவிதாவையும் அவரது மகளையும் பைக்கில் கோவிலுக்கு அழைத்துச்சென்றதாகவும் , இருவரையும் வீட்டில் விட்டு திரும்பியதாகவும் கூறப்படுகின்றது. அப்போது கவிதா அளித்த தகவலின் பேரில் ராகுலை பின் தொடர்ந்து சென்ற நந்தா தலைமையிலான கும்பல், அவரது தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியதாகவும், இதனை மறைத்த கவிதா, ராகுல் விபத்தில் அடிபட்டு கிடப்பதாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆவின் ஊழியர் ராகுல் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக கவிதா, கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக நந்தா, முருகேஷ், நிர்மல், மணிகண்டன், ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். வயதுக்கு மீறிய காதல் தேடி அலைந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியாகி இருக்கின்றது இந்த கொடூர கொலை சம்பவம்..!

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement