செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ராகம் போட்டா ஹாரன் அடிக்கிற.. ஹாரனை கழட்டு மகனே கழட்டு.. கெத்து காட்டிய பெண் ஆர்.டி.ஓ..! பேருந்து ஏற்றி நசுக்கப்பட்ட ஹார்ன்கள்..

Oct 12, 2023 08:13:46 AM

ராசிபுரம் பேருந்துநிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, தடைசெய்யப்பட்ட பைப் ஹாரன்களைப் பயன்படுத்துவதால் பேருந்துகளில் பிரேக் செயல் இழக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்ததுடன், 10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களையும் பறிமுதல் செய்தார்.

தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கெல்லாம் மனசில ஹார்ன் இசை சக்கரவர்த்தி அனிருத்துன்னு நெனப்பு...!

காது ஜவ்வு கிழியுற மாதிரி ஹார்ன் அடித்துச்சென்ற ராசிபுரம் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு அதிரடி நடவடிக்கையால் கிடுக்கிப்பிடி போட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா இவர் தான்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த ஆர்.டி.ஓ நித்தியா, அங்கு நின்றிருந்த தனியார் பேருந்துகளின் ஹாரன்களை அடித்து பார்த்து அந்த அதிக ஒலிஎழுப்பும் பைப் ஹாரன்களை கழற்ற வைத்து பறிமுதல் செய்தார்

கழற்ற மறுத்தவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்ததால் வேகவேகமாக ஹாரனை கழற்றிக் கையில் கொடுத்தனர்.

வேக்குவம் ஹாரனை ஒலிக்கும் போது பிரசர் குறைந்து பேருந்தில் பிரேக் பிடிக்காது என்று தெரிந்தும், எப்படி அந்த அதிக சத்தம் எழுப்பும் ஹாரனை பயன்படுத்துகிறீர்கள் என்று ஓட்டுனர்களிடம் கடிந்து கொண்டார்

சில பேருந்து ஓட்டினர்கள் முன்கூட்டியே கழற்றிக் கொண்டிருந்த போது கையும் களவுமாக சிக்கினர்.

இன்னும் சில ஓட்டுனர்கள் ஹாரன்களை கழற்றி பேருந்துக்குள்ளும் பெட்டிக்கடையிலும் பதுக்கி வைத்தும் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பைப் ஹாரன்களை டயருக்கு அடியில் வைத்து நசுக்க வைத்தார் ஆர்.டி.ஓ நித்தியா

அங்கு நின்றிருந்த பள்ளிப் பேருந்தை ஆய்வு செய்து, இதுபோன்ற ஹாரன்கள் மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றார்

தொடர்ந்து ஒருவழிபாதையில் வந்த காரை மறித்து அபராதம் விதித்த அவர் கார் ஓட்டுனரை எச்சரித்தார்.

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களை அழைத்து அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்

ஒவ்வொரு அதிகாரிகள் இது போல நேர்மையாக தங்கள் கடமையை செய்தால் போக்குவரத்து விதிமீறல்களும், விபத்துக்களும் குறையும்..!


Advertisement
கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பூரில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
டெங்குவால் 7பேர் உயிரிழப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை
கே.ஆர்.பி. அணையிலிருந்து விநாடிக்கு 178 கன அடி வீதம் நீர் வெளியேற்றம்.. தொடர் மழையால் முழுக்கொள்ளளவை எட்டவுள்ள அணை..
குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழும் பெண்கள் தொழில் செய்ய நலத்திட்டம் 30பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான தள்ளுவண்டி, இட்லி பாத்திரங்கள் வழங்கி உதவி..
மளிகைக் கடையில் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் தகராறு..
விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Advertisement
Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்


Advertisement