செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கர்ப்பிணிகள் பலியான விவகாரம் அறிக்கை அளித்ததை கண்டித்து அரசு மருத்துவர்கள் வீம்புக்கு ஸ்டிரைக்..! பதறும் நோயாளிகள் தீர்வு எப்போது ?

Oct 12, 2023 08:14:13 AM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களின் கவனக்குறைவு குறித்து அறிக்கை அளித்த  மாநகராட்சி சுகாதார அதிகாரியை கண்டித்து அரசு மருத்துவர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்திவரும் நிலையில் வியாழக் கிழமை முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளையும் புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்..

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அண்மையில், மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்ட இரு கர்ப்பிணி பெண்கள் அடுத்தடுத்து பலியானது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் விசாரித்து அறிக்கை அளித்தார். அதில், ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்து இரு தினங்கள் ஆன நிலையில் அதனை மறைத்து அவர் உயிரோடு இருப்பதாக ஏமாற்றி இருதய நோய்க்கான சிகிச்சை அளித்ததாகவும், அந்த பெண்ணிற்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை மகப்பேறு மருத்துவர்கள் முழுமையாக திருத்தி இருப்பதாகவும் வினோத் கூறி இருந்தார்.

மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறியதாக கூறி அரசு மருத்துவர் சங்க தலைவர் செந்தில் தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசு மருத்துவர்கள், வினோத் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி 9 வது நாளாக போராட்டம் நடத்தினர்.

இதனால் கடந்த 9 நாட்களாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யாமலும், நோயாளிகளை சரிவர கவனிக்காமலும் வீம்புக்கு போராட்டம் நடத்தி வருவதாக நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.

மாவட்ட அரசு மருத்துவர்களும், மாநகராட்சி சுகாதார அலுவலர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் பணிபுரிந்துவரும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்த, சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அரசு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே வியாழக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை புறக்கணிக்க போவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அறுவை சிகிச்சை நோயாளிகள் தெரிவித்தனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement