செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!

Oct 04, 2023 08:48:59 AM

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கந்து வட்டி விவகாரம் தொடர்பாக பரோலில் வெளி வந்த ஆயுள் தண்டனை கைதி விடுத்த மிரட்டலுக்குப் பயந்து 3 பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சின்ன காலனியைச் சேர்ந்தவர் 34 வயதான கதிரவன். அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் கூலி வேலை பார்க்கும் கதிரவனுக்கு மணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1-ஆம் தேதியன்று கதிரவன் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய கழுகுமலை போலீசார் கதிரவனின் செல்போனை ஆய்வு செய்த போது திடுக்கிட வைக்கும் தகவல்கள் கிடைத்தன.

கதிரவனின் செல்ஃபோனில் உள்ள குரல் பதிவு ஒன்றில், நடராஜன் என்ற நபர் கதிரவனை மிரட்டியது பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. யார் அந்த நடராஜன் என்று போலீசார் விசாரித்த போது, கொலை வழக்கு ஒன்றில் 2009-இல் ஆயுள் தண்டனை பெற்ற கைதி அவர் என்று தெரியவந்தது. கழுகுமலையைச் சேர்ந்த நடராஜனின் மனைவி மாணிக்கம், கந்து வட்டி விடும் தொழிலில் ஈடுபட்டு வந்ததையும் அவரிடம் தற்கொலை செய்து கொண்ட கதிரவன் 8 ஆண்டுகளுக்கு முன் தமது இரட்டை குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக 5000 ரூபாய் கந்து வட்டிக்கு வாங்கியதையும் போலீசார் அறிந்து கொண்டனர்.

5000 ரூபாய் அசலுக்கு வாரந்தோறும் 500 ரூபாய் வட்டியாக கொடுத்து வந்த நிலையில், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு கதிரவன் சரிவர வட்டி கொடுக்கவில்லை எனவும், இதனால் வட்டி குட்டி போட்டு 16 ஆயிரம் ரூபாயாக சேர்ந்து விட்டதாகவும் மாணிக்கம் கூறியுள்ளார்.

மாணிக்கத்தின் கணவர் நடராஜன் செப்டம்பர் 17-ஆம் தேதி பரோலில் வெளியே வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் கதிரவனை அவர் வேலைக்கு போகும் வழியில் மடக்கி நிறுத்தி 16 ஆயிரம் ரூபாய் கந்து வட்டி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இருந்த கதிரவன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்துக் கொண்டே பதிலளித்ததாக கூறப்படுகிறது. அதை அவமரியாதையாக எடுத்துக் கொண்ட நடராஜன், கதிரவனை சாதி ரீதியாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக செல்ஃபோன் குரல் பதிவு மூலம் போலீசார் தெரிந்து கொண்டனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement